தமிழகத்தில் இந்த வருடம் கோடை காலம் கோடை காலமாகவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாள் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வந்தது அதன் காரணமாகவே இந்த வருடம் கோடை காலம் என்பது கோடைகால சாயலே இல்லாமல் கடந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பகல் முழுவதும் கத்தரி வெயில் பொதுமக்களை வாட்டினாலும் இரவு நேரங்களில் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் மீது குடிபோதை நபர் சிறுநீர் கழித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி கடும் கண்டனத்திற்குரிய விஷயமாக மாறியது. சம்பவம் குறித்து முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், நடந்த சம்பவம் வேதனை அளிப்பதாகவும், குற்றவாளி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சிறுநீர் கழித்த நபர் பர் வேஸ் சுக்லா என்பவரை போலீசார் தேசிய பாதுகாப்பு […]
சாலைகளில் நீல நிற போர்டில் சிவப்பு நிறத்தில் கிராஸ் மார்க் இருந்தால் அதற்கு நோ ஸ்டாப் குறியீடு என்று அர்த்தம் எனவும் இந்த புதிய விதியை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது பல்வேறு இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவு பயணம் செய்வதால் மக்களுக்கு […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான இந்தியன் வங்கி கடந்த மார்ச் மாதம் IND SUPER 400 DAYS என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு சிறந்த வைப்பு நிதி திட்டம் ஆகும். இதில் பத்தாயிரம் ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் 400 நாட்கள் […]
2023 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்து அணி தகுதிப்பெற்றுள்ளது. உலகக் கோப்பை போட்டியில் இருந்து மேற்கிந்திய தீவுகள் வெளியேறியதால், இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 அணிகளின் கடுமையான போட்டியின் தொடக்கத்தில் இலங்கை தேர்வானது. தற்போது ஜிம்பாப்வே அணி ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து 234/8 ரன்கள் எடுத்தது. […]
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமதி சுலக்ஷனா நாயக், திரு அசோக் மல்ஹோத்ரா மற்றும் திரு ஜதின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி), ஆண்கள் தேர்வுக் குழுவில் ஒரு தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்தது. மூன்று உறுப்பினர்களைக் கொண்ட CAC, திரு அஜித் அகர்கரை அந்த பதவிக்கு ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது. […]
இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது அதன்படி, குமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, சேலம், திருச்சி, தஞ்சை […]
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில் சென்னை மாநகர மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார். இதுவரையில் தமிழக அரசியல் சரித்திரத்திலேயே 28 வயதில் மேயரானது இவர் மட்டும்தான். அதோடு சென்னையின் முதல் பெண் மேயர் என்ற பெயரையும் இவர் பெற்றார். அதோடு இவருக்கு அரசியல் அனுபவம் அவ்வளவாக இல்லை என்றாலும் மூத்த அமைச்சர்கள் பலர் இவர் அருகில் இருந்து இவரை வழிநடத்த தொடங்கினர். அதன் பிறகு […]
கல்லூரியில் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு 100% கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் விலகும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் […]
அரசுக்கு சொந்தமான மருத்துவமனை இதுபோன்ற மோசமான நிலையில் இருந்தால் எப்படி மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் மருத்துவம் பார்ப்பதற்கு அந்த மருத்துவமனைக்கு வருவார்கள் என்று சுகாதாரத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர், தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தின் மிகவும் கட்டடம் மோசமான நிலையில் இருப்பதாகவும், அதனை இடித்துவிட்டு […]