இந்தியாவில் சிறுபான்மையினர் குறித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குறித்த கருத்துக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர் சந்திப்பின்போது, ​​இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி அளித்த பதிலுக்கு ஆதரவாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். தேர்தல் தோல்விகளை எதிர்கொண்டுவரும் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் ஆதாரம் இல்லாமல் பேசிவருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்திய முஸ்லிம்கள் […]

பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட உணவுப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இதற்காக ஏற்கனவே பரிமாறப்பட வேண்டிய உணவு வகைகள் குறித்து அறிவிக்கப்பட்டதன் படி உணவுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் உப்புமா வகைகள் வழங்க வேண்டும். செவ்வாய்க்கிழமை கிச்சடி வகைகள் வழங்க வேண்டும். புதன்கிழமை காய்கறி […]

ரிசர்வ் வங்கி ஜூலை 2023-ல் வங்கி விடுமுறைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஜூலையில் 15 நாட்கள் விடுமுறை இருக்கும். இருப்பினும், எந்த பகுதியில் வங்கி விடுமுறை உள்ளது என்பது உள்ளூர் நிகழ்வைப் பொறுத்தது. ஜூலை 2023-ல் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட சுமார் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வெவ்வேறு மண்டலங்களில் வெவ்வேறு நாட்களில் இந்த வங்கி விடுமுறைகள் மாறுபடும். ஜூலை 1 வங்கி விடுமுறை, ஜூலை […]

‘எல் நினோ’ எனும் காலநிலை மாற்றம் காரணமாக டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற பாதிப்புகள் அதிகரிக்கலாம்.. கொரோனாவை விட பயங்கரமான வைரஸ்கள் நம்மை தாக்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் எச்சரித்துள்ளார். ’எல் நினோ’ பாதிப்புகள் குறித்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம், ”2023 மற்றும் 2024ஆம் ஆண்டு எல் நினோ நிகழ்வுகளால் […]

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் சிம்பு. ஆரம்பகாலங்களில் துருதுருவென கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரது குடும்பங்களிலும் ஒரு உறுப்பினராகவே மாறியவர். ஆனால், சில காலங்களாக சினிமா இவரை ஒதுக்கி வைத்திருந்தது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு கம்பேக் கொடுத்து மீண்டும் தனது ராஜ்ஜியத்தை உருவாக்கினார் சிம்பு. மாநாடு படம் சிம்புவிற்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. யாருமே […]

மத்திய அரசு மின்சார விதிகளில் செய்துள்ள திருத்தத்தால், வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு நேரத்திற்கேற்ப மின்கட்டணம் உயர்த்தி அமல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேரத்திற்கேற்ப மின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் திருத்தம் வீடுகளுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி […]

சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரள ஸ்டோரி படத்தை எந்த ஓடிடி நிறுவனமும் வாங்க முன்வரவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.  இஸ்லாமிய மதத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் மேலோங்கி இருப்பதாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தியில் உருவான இப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய […]

வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் தமிழக டிஜிபியாக பணிபுரிந்து வரும் சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் ஜூன் 22ஆம் தேதி நடைபெற்றது. அதில் டிஜிபி பதவியில் அமருவதற்கு தகுதியான நபர்களை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், உள்துறை அமைச்சகம் 3 பேரின் பெயரை அனுப்ப மாநில அரசு அந்த மூவரில் ஒருவரை […]

பாப் இசையின் அரசன் மைக்கேல் ஜாக்சன் நினைவு தினம் இன்று.பாப் இசை என்றாலே அனைவரது நினைவிற்கு வரும் ஒருவர் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான்.பாப் இசை, உலகம் முழுவதும் பரவிக்கிடப்பதன் காரணம் மைக்கேல் ஜாக்சன் என்றே சொல்லாம்.இசை மட்டுமல்லாது தன் அசாத்திய நடன திறமையின் காரணமாக புகழின் உச்சத்தை அடைந்தவர் ஜாக்சன்.வெறும் பொழுதுபோக்கு, ஆரவாரத்திற்காக மட்டுமல்லாமல் அவரது பாடல்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுச்சியை தூண்டும் வகையிலும் அமைந்திருந்தது.தனது வாழ்நாளில் […]

ஏஐ கேமரா தொழிற்நுட்பத்தை போலீஸார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த பயன்படுத்துவது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், இத்தகைய அதிநவீன தொழிற்நுட்பம் பயன்படுத்துவதை தடுக்க முடியாது என கூறியதோடு, கேரள மாநில அரசை கேரள உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது. ஏஐ என சுருக்கமாக அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவை பெற்ற தொழிற்நுட்பங்கள் உலகில் பல்வேறு துறைகளில் நுழைய ஆரம்பித்துவிட்டன. ஏஐ சார்ந்த படிப்புகளை படிக்கவும், பயிற்சிகளை பெறவும் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆட்டோமொபைல் வாகனங்களில் […]