fbpx

பழைய உத்தரவுகள் அனைத்தும் ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.. தனது தலைமையில் ஒற்றை தலைமை அமைய வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.. ஆனால் ஓபிஎஸ் இரட்டை தலைமையே வேண்டும் என்று கூறி வருகிறார்.. இதனிடையே ஜூலை 11-ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் […]

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை புதன்கிழமை அன்று அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், […]

10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 4) கடைசி நாள் ஆகும். இன்று […]

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபித்தார்.. மகாராஷ்டிர மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், உத்தவ் அரசுக்கு எதிராக சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்களே திரண்டதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது. சிவசேனாவின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக களமிறங்கினர். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையை இழக்கும் நிலை […]

பிரதமர் மோடியை நேரில் சென்று வரவேற்காத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முடிந்தால் தனது ஆட்சியை கவிழ்க்கட்டும் என்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சவால் விடுத்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஹைதராபாத் வந்த பிரதமர் மோடியை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நேரில் வரவேற்கவில்லை. சந்திரசேகர ராவ்வின் இந்த செயலுக்கு பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. […]

மதுரை மீனாட்சியம்மன் கோவில் அர்ச்சகர் பள்ளிக்கு ஆகம ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. தமிழகம் முழுவதும் கடந்த 2007-ம் ஆகம் ஆசிரியர் பள்ளிகள் திறக்கப்பட்டன.. ஆனால் சிவாச்சாரியார்கள் தொடர்ந்து வழக்கு காரணமாக 2008-ம் ஆண்டு அந்த பள்ளிகள் மூடப்பட்டன.. இதனிடையே மீண்டும் அர்ச்சகர் பள்ளிகளை திறக்க 2015-ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள்ளேயே அர்ச்சகர் பள்ளி புனரமைக்கப்பட்டது.. இந்நிலையில் அர்ச்சகர் […]

சாதி, மதத்தால் நம்மை பிரிக்கும் சக்திகளை பின்னுக்கு தள்ளி ஒன்றிணைந்து முன்னேற பாடுபடுவோம் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை ஆண்டு விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழையும், தமிழ் இனத்தையும் காக்கும் அரசாக திமுக விளங்குகிறது. தமிழ் மொழியை காத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என தமிழர்களின் நலனுக்காக […]

2019 ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்தார் ஆனால் பாஜக தலைவர்கள் பலரும், இந்த கூட்டணி ஆட்சி சில மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.. இந்நிலையில் இந்த கூட்டணிக்கு எதிராக ஆளுங்கட்சி 40 எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி தூக்கியதால் ஆட்சி கவிழ்ந்தது.. உத்தவ் […]

திருமங்கலம் அருகே கண்மாயை குத்தகைக்கு எடுப்பதில் ஏற்பட்ட கடும் போட்டியால் தேர்தல் நடத்தப்பட்ட ருசிகர சம்பவம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நிலையூர் கண்மாய் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாயில் வளர்க்கப்படும் மீன்களை கூட்டுறவுச்சங்கம் மூலம் ஆண்டுதோறும் உள்ளூர் மக்களுக்கு ஏலம் விட்டு மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு கண்மாயை குத்தகைக்கு விடுவதற்கான ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. இதனால், […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ. 38,480 விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]