குஜராத் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர், நெடுஞ்சாலையில் தன் மனைவியோடு செல்லும் போது, குறுக்கே வந்த தெரு நாயின் மீது காரை மோதாமல் இருக்க, பக்கவாட்டில் உள்ள தடுப்புகளில் மோதினார். அதில் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். ஆகையால் அந்த ஆசிரியர், தன் மீதே காவல் துறையில் புகார் அளித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா மாவட்டத்தில், 55 வயது பரேஷ் தோஷி என்ற ஆசிரியர் அவரது […]

உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று பொது சிவில் சட்டம் குறித்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டம் அமலுக்கு வந்தால் லிவ்-இன் உறவு முறையில் இருப்பவர்கள் தங்கள் உறவுகளை பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் இது குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, இனி திருமணம் செய்யாமல் லிவ்-இன் […]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் . தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்து வாரம் தனது அரசியல் கட்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் விஜய். மேலும் தனது கட்சியின் பெயரையும் வெளியிட்டார். தளபதியின் அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. தளபதி விஜய்யின் அரசியல் வருகைக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்களும் […]

தஞ்சையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர், தனது பணியாளர்களை உற்சாகப்படுத்த 11 சொகுசு கார்களை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். தஞ்சையைச் சேர்ந்த சாப்ட்வேர் எஞ்சினியர் ஹம்சவர்தன் 2014ஆம் ஆண்டு பிபிஎஸ் என்ற மென் பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார். 4 பேருடன் ஆரம்பித்த நிறுவனம், தற்போது 400 பணியாளர்கள் கொண்ட நிறுவனமாக வளர்ந்துவிட்டது. இந்நிலையில், தனது ஊழியர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தும் பரிசு ஒன்றை வழங்க ஹம்சவர்தன் முடிவு […]

தஞ்சை அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமன் காலமானார். அவருக்கு வயது 53. தஞ்சாவூர் மாவட்டம் நீலகிரி ஊராட்சிக்குட்பட்ட ரஹ்மான் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரசுராமன். 1985ஆம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த இவர், அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் 2001 முதல் தொடர்ந்து 3 முறை ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முறை போட்டியிட்டதிலே தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2014 முதல் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில், வாஷிங் மெஷினை ‘ஆன்’ செய்ய உதவிக்கு கூப்பிட்ட பக்கத்து வீட்டு பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியைச் சேர்ந்தவர் யோகன்னான். இவர் அந்தமானில் வேலை செய்கிறார். அவரது மனைவி அபிலா (28) தனது 7 வயது குழந்தையுடன் பூத்துறையில் வசித்து வருகிறார். வாஷிங் மெஷின் ஒன்றை புதிதாக வாங்கியுள்ள அபிலா, […]

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, இந்த இடத்தில் பொன் என்பது செல்வத்திற்கான அதிபதி குருவை குறிக்கும்.ஜாதகத்தில் குருவின் பலம் இருப்பதைவிட புதன் பலமாக இருக்க வேண்டும். கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். எந்த ஒரு விஷயத்தையும் கண்ணால் பார்த்தவுடன் அதை கையால் செய்வதற்கு புதன் அனுக்ரகம் வேண்டும். கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. நன்கு படித்தவர்கள் கைநிறைய சம்பளம் வாங்குவதை கண்கூடாக பார்க்கிறோம். […]

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி தேர்தல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. அதிமுகவில் உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை மேலும் புதிய நிர்வாகிகளின் நியமனத்தை தடை செய்ய வேண்டும் எனக் கூறி திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார் . இந்த வழக்கு தொடர்பாக பதிலளித்த தேர்தல் ஆணையம் ஒரு கட்சியின் […]

இந்தியாவில் பாராளுமன்றங்களுக்கான பொது தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலம் முடிவடைய இருப்பதை தொடர்ந்து பாராளுமன்றங்களுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை […]

கன்னியாகுமரி மாவட்டத்தின் தென் தாமரை குளம் பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் கட்டிட தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தென்தாமரைகுளம் வடக்கு கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயன். 47 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் தீராத மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. இந்நிலையில் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்ததால் […]