தமிழ்நாடு அரசின் பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம், தினசரி பால் பாக்கெட்டுகள் மட்டுமின்றி நெய், பன்னீர், தயிர் போன்ற பால் பொருட்களையும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், பண்டிகை காலத்திற்காக வழங்கப்பட்ட தள்ளுபடிகளை நிறுத்தியதன் மூலம், ஆவின் நெய் மற்றும் பன்னீர் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் மாதம் பண்டிகை காலத்தை ஒட்டி […]

கடந்த ஓராண்டாக தொடர்ந்து உச்சத்தில் பறந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது சற்று ஆசுவாசமடைந்து நிலையாக உள்ளது. சில நாட்கள் லேசான ஏற்றம் கண்டாலும், பெரியளவிலான விலை உயர்வு இல்லாமல் வர்த்தகமாகி வருகிறது. இந்தச் சூழலில், வரும் காலங்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும், இனியும் அதன் ஏற்றம் தொடருமா என்பது குறித்துப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு தங்கத்தின் […]

ஜி.எஸ்.டி பலனை மக்களுக்கு வழங்காமல் ஊட்டச்சத்தைப் பறிக்கும் ஆவின் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தத்திற்கு இணங்க ஆவின் பொருட்களின் விலையைக் குறைக்காமல் இழுத்தடித்த திமுக அரசு, மக்களின் கண்டனக் குரல் எழும்பியதும் பண்டிகைக் கால போர்வையில் […]

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், தகுதியுள்ள மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று நடப்பு ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த மாதமே தொடங்கி வைக்க உள்ளார். மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் […]

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில், அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 30.04.2025 தேதியிட்ட அதன் முடிவின்படி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும். 1990 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விதிகளின் விதி 6-ன் படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு சார்ந்த கேள்விகள் /அட்டவணைகளை மத்திய அரசு சட்டப் பிரிவு 8-இன் துணைப்பிரிவு (1)-ன் கீழ் அதிகாரப்பூர்வ அரசிதழ் மூலம் அறிவிக்கிறது. தலைமைப் பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் […]

கார்த்திகை பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும். இந்தப் புனித நாளில் சிவபெருமான், பெருமாள், முருகன், அம்பிகை, குலதெய்வம் மற்றும் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி ஆகிய தெய்வங்களை வழிபடப் பல மடங்கு அதிகமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வரும் கார்த்திகை பௌர்ணமியில் நாம் செய்யும் வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மங்கள காரியங்கள் அனைத்தும் பல மடங்கு பலனை திருப்பிக் கொடுக்கக் கூடிய […]