மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. சமீபத்தில் பெய்த மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பை சந்தித்தன. அதில், சென்னை முழுவதும் நீரால் சூழ்ந்தது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அறக்கட்டளை மூலமாக 20-க்கும் மேற்பட்ட நிவாரண பொருட்களை 4 மாவட்டங்களுக்கு 15 வண்டிகளுக்கு மேல் அனுப்பி வைத்தார். அதில் […]

நம்மில் பலர் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம். இதன் மூலம் நாம் வீட்டை விட்டு வெளியேறாமல் நமக்கு தேவையானதை ஆர்டர் செய்து, ஆஃபர் என்ற பெயரில் மலிவாக பெற்றுக் கொள்கிறோம். எந்த அளவிற்கு ஆன்லைன் ஷாப்பிங் நமக்கு உதவியானதாக இருக்கிறதோ, அதே அளவிற்கு சில குறைபாடுகளை இருக்கத்தான் செய்கிறது. ஆன்லைன் மூலம் செய்யப்படும் ஆர்டர்கள் தாமதாகவும், சிலது தவறாக அல்லது உடைந்து வருவதாக கூறி […]

தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் ஜனவரி மாதம் வர இருக்கிற பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பொருட்களுடன் ரூ.1,000 கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர். இதற்கான பணிகளை அரசு மேற்கொண்டிருந்த நிலையில், புயல் பாதிப்பு திடீர் முட்டுக்கட்டை போட்டது. இதனையடுத்து சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் […]

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட மக்கள் தற்போது வரை மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், புயலின்போது கடுமையாக உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கினார். மிக்ஜாம் புயலால் சென்னை மாநகரமே […]

ஸ்டைலால் ரஜினியும், ஜனரஞ்சக நடிப்பால் கமலும் தமிழ்த்திரை உலகில் பல ரசிகர்களைக் கொண்டிருந்த நேரத்தில் இயல்பான நடிப்பாலும், பேச்சாலும், சமூகக் கருத்துகளாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் விஜயகாந்த். நடிக்க ஆரம்பித்த வெகு சில காலத்திலேயே அவரின் நெருங்கிய நண்பர்களால் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டன. இலவச தையல் மெஷின் வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் கொடுப்பது, இலவசத் திருமணங்கள் நடத்தி வைப்பது, ஆண்டுதோறும் தன் […]

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகளை வருகின்ற ஜனவரி மாதத்திற்குள் வெளியிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் தமிழக அரசிற்கு ஆணையிட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தெருவில் நடந்த மோசடி தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கண்மணி கீதா மற்றும் முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் மதுரை உயர்நீதிமன்ற […]

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கோவில் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்து சமய அறநிலைத்துறை சிறப்பான முறையில் செயல்படுவதாகவும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார். மேலும் கோவில் விஷயங்களில் அரசியல் செய்யக்கூடாது என பாரதிய ஜனதா கட்சிக்கு எச்சரிக்கையும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் பல ஆண்டுகள் குடமுழுக்கு நடைபெறாமல் இருந்த பல […]

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடல் அட்டைப் பெட்டிக்குள் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பற்ற சம்பந்தப்பட்ட நபர் தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார். புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதுகாப்பு கருதி […]

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் இந்தியில் முதன் முதலில் அனுராக் பாசு என்பவர் இயக்கத்தில் கேங்ஸ்டர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், கங்கனா ரனாவத்தின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இது போன்ற […]

உத்திரபிரதேச மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரியின் மகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மூன்று நபர்களை உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவில் அரசு அதிகாரியாக இருப்பவரின் மகள் அங்குள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த ஐந்தாம் தேதி கடத்தப்பட்ட மாணவி வாகனத்தில் வைத்து மூன்று நபர்களால் கூட்டு […]