சில வேலைகள் நின்று கொண்டே செய்வது நல்லது, மற்றவை உட்கார்ந்திருக்கும் போது செய்வது நல்லது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வழக்கத்தைப் பின்பற்றாதது வீடு முழுவதும் எதிர்மறை சக்தியைப் பரப்பக்கூடும். இது நிதி இழப்புகளுக்கும் ஒரு நபரின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் சரிவுக்கும் வழிவகுக்கும். எனவே, எந்தெந்த வேலைகளை நின்று கொண்டே செய்யக்கூடாது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். இந்தத் தொகுப்பில், நிதி இழப்புகள் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க பெண்கள் […]

நாட்டில் உள்ள பல அரசு வங்கிகளை (பொதுத்துறை வங்கிகள்) ஒன்றாக இணைத்து, உலக அளவில் போட்டி போடும் திறன் கொண்ட மிகப் பெரிய வங்கிகளை உருவாக்க மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த புதிய திட்டம் குறித்து ரிசர்வ் வங்கியுடனும் (RBI), வங்கித் துறைத் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இப்போது நிறைய சிறிய அரசு வங்கிகள் உள்ளன. அவற்றுக்குப் பதிலாக, […]

மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்முயற்சியான காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நான்காவது பதிப்பை (KTS 4.0) ஏற்பாடு செய்ய உள்ளது சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்). பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சியான இந்த ஒரு மாத கால கலாச்சார மற்றும் அறிவுசார் சங்கமம், தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான காலத்தால் அழியாத பிணைப்பைக் கொண்டாடுகிறது. டிசம்பர் 2, 2025 அன்று தொடங்கும் இந்த நிகழ்வு, ராமேஸ்வரத்தில் ஒரு பிரமாண்டமான […]

ரஷ்ய ராணுவத்தில் 44 பேர் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை விரைந்து விடுவிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது, என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதல் முதல், ரஷ்யாவில் வேலை என மோசடி செய்து பல இந்தியர்கள் இடைத்தரகர்கள் மூலம் அங்கு செல்கின்றனர். அங்கு அவர்களை வலுக்கட்டாயமாக ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு, போரில் ஈடுபடுத்தப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றனர். இந்தநிலையில், இது குறித்து தகவல் அறிந்ததும், அவர்களை மீட்பதற்கான […]

4 ஆண்டுகளில் 211 மசோதாக்களில் 170-க்கு ஒப்புதல் வழங்கப்பட்டது என தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில்: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்வதாகவும், அவரது நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரானதாக உள்ளதாகவும், சில ஆதாரமற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் பொதுவெளியில் வைக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 31, 2025 வரை […]

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2026-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்ள உள்ளனர். கள ஆய்வுப் பணி விவரங்கள் : வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO), இந்த கணக்கெடுப்பின்போது […]

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில், குமரமலை பாலதண்டாயுதபாணி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலின் தனிப்பட்ட சிறப்பம்சம் என்னவென்றால், கர்ப்பிணி பெண்கள் தங்கள் வளைகாப்பு நிகழ்ச்சி அன்று இங்குள்ள அர்த்த மண்டபத்தில் வேலி வளையல்களை கட்டி வழிபடுவது வழக்கம். அவ்வாறு செய்வதால் அவர்களின் பிரசவம் எளிமையாகும் என்பது பல காலமாக அங்கு நிலவும் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். இங்கு மூலவராக பாலதண்டாயுதபாணி அருள்பாலிக்கிறார். கந்த சஷ்டி, கார்த்திகை, […]

பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இருந்து தெருநாய்கள் மற்றும் கால்நடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெருநாய் பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் இடைக்கால உத்தரவில், விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1960 இன் கீழ் உருவாக்கப்பட்ட விலங்கு பிறப்பு கட்டுப்பாடு (ABC) விதிகள், 2023 இன் படி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் டிப்போக்கள் […]

தொப்பை கொழுப்பு உள்ள பெண்களுக்கு கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இடுப்பைச் சுற்றி கூடுதலாக ஒரு சென்டிமீட்டர் கொழுப்பு இருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. உடல் பருமன், அல்லது வயிற்று கொழுப்பு அதிகரிப்பது, இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அனைவரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் […]

தமிழகத்தில் தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், நாளை முதல் வரும் 13-ம் தேதி வரை தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, […]