பீகார் மாநிலம் ஷிவான் மாவட்டத்தை சேர்ந்த முகமது இஸ்ரேல் அக்பர் அலி அன்சாரி என்ற சமீர் பிஹாரி (சமீர்) என்ற கட்டிட தொழிலாளி, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக தன் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீர் பிஹாரி, அவரது மனைவி ரூபி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கடந்த 5 ஆண்டுகளாக அகமதாபாத்தில் உள்ள அஹமதி ரோ என்ற பகுதியில் வசித்து வந்துள்ளார். […]

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குளக்காரன்பட்டியில், காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் கொதிக்கும் சமையல் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் பி. ஃபார்ம் படித்து வரும் வினிதா (21) என்ற அந்த மாணவி, உடல்நலக் குறைவு காரணமாக தனது வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில், அவருடைய முன்னாள் காதலன் ரஞ்சித், வினிதா […]

இந்தியாவின் உச்சநீதிமன்றம், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஷமியின் மனைவியாக இருந்த ஹசீன் ஜஹான், தன்னுக்கும் மகளுக்கும் வழங்கப்பட்ட மாதாந்திர பராமரிப்பு தொகையை உயர்த்துமாறு மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு தொகை குறித்த மனு கொல்கத்தா உயர்நீதிமன்றம் முன்பு ஹசீன் ஜஹானுக்கும் அவரது மகளுக்கும் மாதம் ரூ.1.5 லட்சம் மற்றும் […]

சென்னை மெரினா நொச்சிக்குப்பம் லூப் சாலைப் பகுதியில் உள்ள கடற்கரையில், கள்ளக்காதல் விவகாரம் காரணமாக ஆட்டோ டிரைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில், கடற்கரை மணல் பரப்பில் தலையின் பின்புறம் பலத்த வெட்டுக் காயங்களுடன் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள், உடனடியாக மெரினா போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். பின்னர், விரைந்து வந்த மயிலாப்பூர் […]

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மசூதியில் இன்று தொழுகை நடைபெறும் போது அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. இந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சுமார் 54 பேர், பெரும்பாலும் மாணவர்கள், காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் சிறிய அளவு காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மசூதியில் தொடர் வெடிப்புகள் ஜகார்த்தாவின் கேலபா காடிங் பகுதியில் உள்ள கடற்படை வளாகத்திற்குள் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியான SMA 27 மசூதியில் […]

வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் சஞ்சாரம் அவ்வப்போது முக்கியமான யோகங்களை உருவாக்குகிறது. அத்தகைய ஒரு நல்ல யோகம் மாளவ்ய ராஜயோகம். செல்வம், அழகு, ஆடம்பர வாழ்க்கை மற்றும் அன்பின் கிரகமான சுக்கிரன் தனது சொந்த வீட்டில் அல்லது ஒரு உயர்ந்த ராசியில் இருக்கும் போது இந்த ராஜயோகம் உருவாகிறது. சுக்கிரனின் நிலை காரணமாக இன்று உருவாகும் இந்த மாளவ்ய ராஜயோகம், சில குறிப்பிட்ட ராசிகளுக்கு எதிர்பாராத செல்வத்திற்கும் மகத்தான வெற்றிக்கும் கதவைத் […]

இந்தியா தேசியப் பாடலான “வந்தே மாதரம்” 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது பாஜக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நேரு தன்னிச்சையாக துர்கா தேவியைப் புகழ்ந்த பாகங்களை நீக்கி, பாடலின் சுருக்கப்பட்ட வடிவத்தை வெளியிட்டார் என்பது தான் பாஜகவின் குற்றச்சாட்டு.. பாஜக தேசியப் பேச்சாளர் சி.ஆர். கேசவன், தனது எக்ஸ் பக்கத்தில் “ 1937 ஆம் ஆண்டில் காங்கிரஸ் செய்தது “வரலாற்று பாவமும் […]

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது கோடநாடு பங்களாவில் நடந்த கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதன்பின்னர் இதில் சம்பந்தப்பட்ட பலரும் கொலை செய்யப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.. 8 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.. சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தான் ஏ1 என்று கூறியிருந்தார்.. இதனால் கோடநாடு வழக்கு பற்றிய […]