அனைத்துக் கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் ஸ்டாலின், தற்போது மட்டும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம். பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் […]

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மாவட்ட பொறுப்பாளர்கள் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, இது […]

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கர்லப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் பத்திரப்பதிவு எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில், பழனி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து […]

மகளிர் உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.51 கோடி பரிசுத் தொகை அறிவித்த பிசிசிஐ. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் முன்னேறின. இதனையடுத்து நவி […]

ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினமானது, பல ஆன்மீக முக்கியத்துவங்களை கொண்டது. குறிப்பாக, சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் புனித நாளாக இது கொண்டாடப்படுகிறது. அகிலத்தின் தந்தையாக விளங்கும் சிவபெருமானின் லிங்க திருமேனி முழுவதும் சமைத்த அன்னத்தால் முழுவதுமாக மூடப்பட்டு அபிஷேகம் செய்யப்படுவது இந்த நாளின் தனிச்சிறப்பு. இந்த அன்னாபிஷேக தரிசனம் காண்பதால், ஒரே நேரத்தில் கோடி லிங்கங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்பட்ட இந்த அன்னம், […]

கனிமக் கொள்ளையர்களும், அவர்களுக்கு துணையாக இருக்கும் காட்பாதர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். அதற்கான நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து மேற்கொள்ளும் என அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் கனிமவளக் கொள்ளையால் மக்களுக்கும் உழவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக நெல்லையில் இன்று நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பி.யு.சி.எல் எனப்படும் மக்கள் சிவில் உரிமைகள் ஒன்றியத்தின் தேசிய […]

கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு பட்டதாரிகள் நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இருமுறை […]

நீங்கள் வாங்க போகும் சொத்து அல்லது உங்கள் பெயரில் உள்ள சொத்துக்களுக்கு எப்படி பட்டா வாங்குவது என்பதை பார்க்கலாம். நில பட்டா வாங்க, முதலில் உங்கள் சொத்து எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்குள் வருகிறதோ அங்குள்ள தாசில்தார் அலுவலகத்தை அணுக வேண்டும். பின்னர், இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பது அல்லது நேரில் சென்று விண்ணப்பிப்பது என இரண்டு வழிகளில் பட்டாவிற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க, தமிழ்நாடு அரசின் மின்-சேவைகள் இணையதளமான eservices.tn.gov.in […]