கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.. கோவை விமான நிலையத்தின் பின்புறம் நேற்றிரவு காரில் தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்த 21 வயதாகும் இந்த மாணவி கோவையில் உள்ள கல்லூரி ஒன்றி படித்து வருகிறார்.. இந்த நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் தனது ஆண் […]

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4ஆம் வகுப்பு படித்து வந்த ஒன்பது வயது சிறுமி பள்ளி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். நவம்பர் 1 மதியம் 1.30 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த மாணவியின் பெயர் அமய்ரா என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை […]

பணமோசடி வழக்கில் அனில் அம்பானி குழுமத்தின் ரூ.3,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. அமலாக்க இயக்குநரகம் (ED) அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்துடன் (Reliance Anil Ambani Group) தொடர்புடைய நிறுவனங்களின் ரூ. 3,084 கோடி மதிப்பிலான சொத்துகளை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.. இந்த உத்தரவு 2025 அக்டோபர் 31 அன்று, பணமோசடி தடுப்பு சட்டம் (PMLA) பிரிவு 5(1) அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது. முடக்கப்பட்ட […]

தற்போதைய நவீன வாழ்க்கை முறையில் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால், இளம் வயதினரிடையே திடீர் மாரடைப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போதும், நடனமாடும்போதும், நடைபயிற்சியின்போதும் திடீரென ஏற்படும் மாரடைப்பு சம்பவங்கள் அடிக்கடி செய்திகளில் வருகின்றன. எந்தவிதமான கெட்ட பழக்கங்களும் இல்லாத இளைஞர்கள் கூட மாரடைப்பால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த அபாயகரமான காலகட்டத்தில், இருதய அடைப்புகளை […]

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் மாதம் தெரிவித்தார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்தார்… எனினும் செங்கோட்டையன் விதித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் செங்கோட்டையன் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார்.. பசும்பொன் முத்துராமலிங்க […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

தெலுங்கானாவின் ரங்கா ரெட்டியில் அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர்.. 18 பேர் காயமடைந்தனர். செவெல்லா அருகே தெலுங்கானா சாலை போக்குவரத்துக் கழக (RTC) பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து, டிப்பரில் இருந்த சரளைக் கற்கள் பேருந்தின் மீது விழுந்தன. மோதிய பிறகு பேருந்தில் இருந்த பயணிகள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. […]