மாம்பழம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம் கோடைகாலத்தின் தனிச்சிறப்பு. ஆனால், மாம்பழத்தின் பலன்களை அதன் இலைகளில் இருந்தும் பெற முடியும் என்பது பலருக்கும் தெரியாது. ஆம், மாமர இலைகள் ஆரோக்கியம் நிறைந்த அற்புதப் பொக்கிஷம். வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளான ஃபிளாவனாய்டுகள், பாலிபினால்கள் ஆகியவை இந்த இலைகளில் நிறைந்துள்ளன. சர்க்கரை நோய் கட்டுப்பாடு முதல் இதய ஆரோக்கியம் வரை […]
பீகார் தேர்தல், 2025 தேர்தலுக்கு முந்தைய மற்றும் வாக்குப்பதிவு நாளில் அச்சு ஊடக விளம்பரங்களுக்கு எம்சிஎம்சி மூலம் முன்கூட்டிய சான்றிதழ் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2025 பீகார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான அட்டவணையையும், 8 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு தேதி நவம்பர் 6, 2025 (வியாழக்கிழமை), நவம்பர் 11, 2025 (செவ்வாய்க்கிழமை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நியாயமான பிரச்சார சூழலை உறுதி செய்வதற்காக, […]
தங்கம் என்பது வெறும் ஆபரணம் அல்ல. அது ஆன்மீக ஆற்றல் கொண்டது என்றும், தீய சக்திகளை விரட்டி, நேர்மறை அதிர்வுகளை ஈர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்து சமயத்தில், தங்கம் செல்வத்தின் தெய்வமான லட்சுமியின் அம்சமாகக் கருதப்படுவதால், இது அதிர்ஷ்டம், அமைதி மற்றும் மகிழ்ச்சியை ஈர்க்கும் ஒரு முக்கிய முதலீடாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், தங்க நகைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்களைக் கொடுப்பதில்லை. சிலர் அதிர்ஷ்டத்தைப் பெறலாம், சிலருக்குச் சில சிக்கல்கள் […]
தீபாவளிக்குப் பிறகு காற்று நச்சுத்தன்மையாக மாறியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தலைநகர் டெல்லியில் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு சுமார் 11.1 சிகரெட்டுகளை புகைப்பது போன்றதாகும். தீபாவளிக்குப் பிறகு , டெல்லியின் காற்று மீண்டும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது. அக்டோபர் 21 ஆம் தேதி காலையிலும் கூட , தலைநகரின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமானது முதல் கடுமையானது வரையிலான பிரிவில் இருந்தது. பெர்க்லி எர்த் அறிக்கையின்படி , […]
11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி,தஞ்சை, விழுப்புரம், சிவகங்கை,செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை கனமழைஎச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இன்று பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 27ஆம் தேதி வரை அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக […]
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் […]
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையேயான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, டிரம்ப் மற்றும் புதின் இடையே திட்டமிடப்பட்ட சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி ஆராய இரண்டு வாரத்துக்குள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற இருந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திக்கவிருந்தனர். ஆனால், அமெரிக்க மற்றும் ரஷ்ய […]
ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஐஸ்லாந்து கோடை மாதங்களில் நள்ளிரவு சூரியன் எனப்படும் நிகழ்வை அனுபவிக்கிறது. மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஜூலை நடுப்பகுதி வரை, ஐஸ்லாந்தின் சில பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 24 மணிநேரம் சூரிய ஒளி தென்படுகின்றது. வடக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடு தான் ஐஸ்லாந்து. இந்த தீவு நாடு பல்வேறு ஆச்சரியங்களின் பொக்கிஷத்தை வைத்திருக்கிறது. பொதுவாக பனி பிரதேச நாடுகளில் கொசுக்கள் இருக்கவே இருக்காது. […]
தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் […]
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மதியம் தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய […]

