திருமண உறவில் இருந்து கணவர் வெளியேறினாலும், தனது மாமியார் வீட்டில் தொடர்ந்து வசிப்பதற்கு மனைவிக்கு உரிமை உண்டு என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு 2010ஆம் ஆண்டில் திருமணம் செய்த ஒரு தம்பதியினரின் குடும்பச் சிக்கலை சார்ந்தது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த இவர்களது திருமண வாழ்க்கையில், கணவருக்கும் அவரது தாயாருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மகன் மற்றும் மருமகளை வீட்டை விட்டு […]

சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு மத வழிபாட்டுத் தலங்கள், விமானநிலையம், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மர்ம நபர்கள் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீஸார், வெடிகுண்டு […]

அமெரிக்காவின் பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இருந்த முயற்சியை எப்பிஐ அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்தனர். பல்வேறு நாடுகன் விவகாரங்களில் தலையிட்டு வருவதால், அமெரிக்க அதிபர் டிரம்பின் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் பென்சில்வானியாவில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது காதில் குண்டு காயம் […]

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டால், கடுமையான வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நான் பிரதமர் மோடியுடன் பேசினேன். இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்காது என்று அவர் கூறினார். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் அதிக வரிகளை செலுத்த வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார். ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதியளிப்பதாக […]

பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 20, 2025) தனது நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். சமூக ஊடக தளத்தில் ஒரு பதிவில், பிரதமர் மோடி, “எனது சக குடிமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள். இந்த புனித தீபத் திருநாள் அனைவரின் வாழ்க்கையையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தால் ஒளிரச் செய்யட்டும்” என்று எழுதினார். பிரதமர் மோடி பண்டிகைகளின் போது உள்நாட்டுப் பொருட்களை வாங்குமாறு மக்களை வலியுறுத்தி […]

மத்திய டெல்லியின் ராம் நகர் பகுதியில் திருமணத்தை மீறிய உறவு தொடர்பான தகராறில் கருவில் இருந்த சிசு உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இல்லத்தரசியான ஷாலினி (22), ஆட்டோ ஓட்டுநரான தனது கணவர் ஆகாஷ் (23) மற்றும் ஆஷு என்கிற ஷைலேந்திரா (34) ஆகியோரின் கள்ள உறவே இந்த மொத்த சம்பவத்திற்கும் காரணமாக அமைந்துள்ளது. இரண்டு மகள்களுக்குத் தாயான ஷாலினி, ஆஷுவால் கருவுற்றதாக கூறப்பட்ட நிலையில், தனது கணவருடன் […]

ரஷ்யாவுடன் உக்ரைன் ஒரு உடன்பாட்டை எட்டவில்லை என்றால், “புடின் உங்களை அழித்துவிடுவார்” என்று டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யா-உக்ரைன் தொடர்பாக வெள்ளை மாளிகையில் டிரம்பும் ஜெலென்ஸ்கியும் சந்தித்தனர். அப்போது பேசிய டிரம்ப், ரஷ்ய நிபந்தனைகளை ஏற்குமாறு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பைனான்சியல் டைம்ஸில் வெளியான ஒரு அறிக்கையின்படி, சந்திப்பு சில நேரங்களில் “சத்தமாகவும் ஆக்ரோஷமாகவும்” இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. சந்திப்பின் […]

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் மருத்துவத் துறைக்கான முக்கியமான முன்னேற்றம் குறித்துத் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்ட முதல் நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotic) மூலக்கூறான ‘நபித்ரோமைசின்’ (Nabactromicin) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த புதிய நுண்ணுயிர்க்கொல்லி மருந்து, குறிப்பாக சுவாச நோய்களுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும், புற்றுநோயாளிகள் மற்றும் […]

தஞ்சையில் நவம்பர் 15ம் தேதி தண்ணீருக்காக மாநாடு நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். 2026 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, ஐம்பூதங்களை அடிப்படையாகக் கொண்டு, நிலம், நீர்,வானம், நெருப்பு, காற்று மாநாடு […]

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே கீழ் வாய்ப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் 61 வயதுடைய லதா குமாரி. இவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்குப் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் காவலர் ஒருவரின் குடும்பம் வசித்து வந்தது. அக்காவலரின் மனைவி சுமையா (46) என்பவர், பக்கத்து வீட்டுப் பழக்கம் என்ற முறையில் லதா குமாரியுடன் நட்புரீதியில் பழகி வந்துள்ளார். இந்த அறிமுகத்தைப் பயன்படுத்திக் கொண்ட […]