இந்துக்களின் வழிபாட்டு மரபில், எந்தவொரு காரியத்தை தொடங்கும் முன்னரும் முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவது வழக்கம். விநாயகரை வணங்கித் தொடங்கும் காரியங்கள் தடைகள் நீங்கி வெற்றி பெறும் என்பது ஆழமான நம்பிக்கை. மற்ற தெய்வங்களின் வழிபாட்டு முறைகளில் இருந்து விலகி, விநாயகரை வழிபடும் முறை சற்று மாறுபட்டதாகும். தலையில் குட்டிக் கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் அவரை வழிபடுவது ஏன் என்பதற்கும், இதில் உள்ள அறிவியல் பின்னணிக்கும் பல விளக்கங்கள் […]
தமிழகத்தில் திமுக ஆட்சி முடிவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. நெல்மணிகள் முளைத்து வீணாகி வருகின்றன. விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இதுகுறித்து கவலைப்படாமல் முதல்வரும், துணை முதல்வரும் சினிமா பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள்தான் உள்ளன. இதற்கான கவுன்ட் […]
ரூ.21,650-க்கு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் – கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இது கொரோனா காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது. இதன் பிறகு 2021-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது கைக்கணினி (டேப்) வழங்கப்படும் […]
தமிழகத்தில் இன்று முதல் 7-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தெற்கு மியான்மர் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் […]
இன்று (நவம்பர் 1) அதிகாலை, ஜெத்தா (சவூதி அரேபியா) – ஹைதராபாத் இடையே பறந்த இண்டிகோ விமானம் 6E 68-இல் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, மும்பை விமான நிலையத்தில் முழுமையான அவசரநிலை அறிவிக்கப்பட்டது. 185 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம் காலை 7.30 மணியளவில் மும்பை நோக்கி திருப்பி விடப்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் (ATC) உடனடியாக அவசர நடைமுறைகளை செயல்படுத்தி, அனைத்து பாதுகாப்பு […]
ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுஹா பகுதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். எகாதசி விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தனியார் நிர்வாகத்தில் இயங்கும் இந்தக் கோவிலுக்கு திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் தடுப்பு கம்பிகள் சரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த துயரச்சம்பவம் எப்படி நடந்தது? கோவிலின் கதவுகள் திறக்கப்பட்டவுடன் பெரும் அளவிலான கூட்டம் ஒரே […]
வயிற்றுப் புற்றுநோய் (Stomach or Gastric Cancer) தற்போது மிகவும் பொதுவான நோயாக மாறி வருகிறது.. குறிப்பாக இளம் வயதினரிடையே இந்த நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது… ஒவ்வொரு 1 இலட்சம் பேரில் சுமார் 7 பேருக்கு வயிற்றுப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது, மேலும் அதில் 3 பேர் மரணமடைகின்றனர். நிபுணர்கள் கூறுவதாவது, ஆண்கள் மற்றும் பெண்களில் சுமார் 0.8 சதவீதம் பேர் தங்கள் வாழ்நாளில் எப்போதாவது இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள். […]
ஜெயலலிதா இருந்த வரை பலம் வாய்ந்த கட்சியாக இருந்த அதிமுக இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. இதன் விளைவாக 2019 முதல் 2024 நடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலுவான கட்சியாக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் […]
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் சொந்த அண்ணனே தங்கையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் ஆசிஷ் நிஷாத் (32) என்பவரது தங்கை நீலம் (19). அரசு வழங்கிய சுமார் ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகையை இருவரும் சமமாகப் பிரித்துக்கொள்வதில் அவர்களிடையே நீண்ட நாட்களாகப் பிரச்சனை இருந்துள்ளது. சமீபத்தில், இந்தப் பணப் பங்கீடு தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த ராம் […]
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி பகுதியில் வேலு (34) என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் 12 மற்றும் 8 வயது கொண்ட இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், 6 வருடங்களுக்கு முன்பு தம்பதியருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, வேலுவின் மனைவி இளைய மகளுடன் தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின் மூத்த மகள் தந்தையின் […]

