நாட்டின் பொதுப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, ‘சென்னை ஒன்’ என்ற ஸ்மார்ட்ஃபோன் செயலியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்த உள்ளார். சென்னையின் பல்வேறு போக்குவரத்து சேவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் இந்த புதுமையான செயலியை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் வடிவமைத்துள்ளது. இந்த செயலியின் அறிமுகம், CUMTA-வின் இரண்டாவது ஆணையக் கூட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், முதல்வர் இந்த செயலியைத் தொடங்கி வைப்பதோடு, அடுத்த […]
நவீன வாழ்க்கை முறை, வேலைப்பளு, உணவு பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, பலரும் காய்கறிகளை ஒரே நேரத்தில் வாங்கி ஃப்ரிட்ஜில் சேமித்து வைக்கின்றனர். இது பாதுகாப்பான வழிமுறையாக தோன்றினாலும், சில காய்கறிகளை ஃப்ரிட்ஜில் வைப்பது சுவையையும், ஊட்டச்சத்துக்களையும் கெடுக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில், பிரிட்ஜில் வைக்கக் கூடாத காய்கறிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். பிரிட்ஜில் தவிர்க்க வேண்டிய முக்கிய காய்கறிகள் : வெள்ளரிக்காய் : நாம் […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த திடீர் அறிவிப்பு பல்வேறு ஊகங்களை கிளப்பியுள்ளது. பிரதமர் என்ன பேசுவார் என்பது குறித்த தகவல்களை அரசு வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை வெளியிடவில்லை. இதனால், இந்த உரை குறித்து தேசிய அளவில் கவனம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளைய தினம் (செப்டம்பர் 22) ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தங்கள் அமலுக்கு வர உள்ள நிலையில், இதுபற்றி […]
இந்தியாவில் பல்வேறு மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 32 மருந்து மாதிரிகள் தரமற்றவை என மத்திய மருந்து ஆய்வகங்கள் நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் வழக்கமான ஆய்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு அதன் இணையதளத்தில் தரமற்ற மற்றும் போலியான மருந்துகளின் பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான சோதனையில், மத்திய மருந்து ஆய்வகங்கள் […]
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்பவரின் மகன் தங்கவேல்சாமி (28). கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இவர் நெல்லை, வண்ணாரப்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநரான சுப்பையாவின் மனைவி பார்வதி (33) என்பவருடன் தங்கவேல்சாமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இவருக்கும் […]
2026 ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நாகப்பட்டினம் புத்தூர் அண்ணா சிலை அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். தனது பேச்சில், “மீன் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாகையில், நவீன மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை. இலங்கை கடற்படையால் […]
பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை சார்பாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் ஆசிரியர் […]
நவீன தொழில்நுட்ப உலகில், நமது செல்போன் எண் என்பது அரசு சேவைகளை பெற முக்கிய அடையாளமாக மாறிவிட்டது. குறிப்பாக ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து தகவல்களும், புதுப்பித்தல்களும், விதிகளும் நமது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்குத்தான் நேரடியாக அனுப்பப்படுகின்றன. எனவே, நமது மொபைல் எண் மாறும்போது, அதை ஓட்டுநர் உரிமத்தில் புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில், தற்போதைய டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அரசின் பல சேவைகள் இப்போது ஆன்லைனில் கிடைக்கின்றன. […]
இன்றைய பொருளாதார சந்தையில், முதலீட்டாளர்கள் தங்கம், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் போன்ற முதலீடுகளை நோக்கியே கவனம் செலுத்துகின்றனர். ஆனால், பலரும் கண்டுக்கொள்ளாத ஒரு முதலீட்டு வாய்ப்பு, வெண்மையாக ஜொலிக்கும் வெள்ளியில் உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் வெள்ளி முதலீடுகள் கொடுத்த லாபம், நம்மை ஆச்சரியப்பட வைக்கலாம். ஆபரணமா? ETF-ஆ? வெள்ளியில் முதலீடு செய்ய முடிவெடுத்தால், முதலில் மனதில் எழும் கேள்வி, அதை ஆபரணங்களாக வாங்குவதா அல்லது நிதியாக […]
நாகையில் பரப்புரை செய்த விஜயை பார்க்க வந்தவர்கள் பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக நாகை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான மாதா திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. தவெக தொண்டர்கள் அதிகளவில் சுற்றுச்சுவரில் ஏறியதால், சாய்ந்ததாக புகார் அளிக்கப்பட்டது. நாகை – புத்தூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று பரப்புரை செய்தபோது விதிமுறைகள் மீறல் ஈடுபட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகரும் தமிழக […]

