ஜூன் 26 முதல் கடுமையான மழை மற்றும் திடீர் வெள்ளத்திற்கு மத்தியில் பாகிஸ்தான் முழுவதும் குறைந்தது 1,006 பேர் இறந்துள்ளதாகவும், 3.02 மில்லியன் பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) அறிவித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் மொத்தம் 5,768 மீட்பு நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாகவும், இதன் போது 273,524 நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் NDMA தெரிவித்துள்ளது. NDMA, மாகாண பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், பாகிஸ்தான் […]

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் […]

ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்த ஷேக் அம்ஜத் என்பவர், குடும்ப பிரச்சனையால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற தன்னுடைய மனைவியை சமாதானம் செய்வதற்காக 175 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலசோர் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு சென்று மனைவியைச் சந்தித்தபோது, இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அம்ஜத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே தனது மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்து […]

காண்டாமிருகங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி உலக காண்டாமிருக தினம் அனுசரிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில், உலக வனவிலங்கு நிதியம்-தென்னாப்பிரிக்கா உலக காண்டாமிருக தினத்தைத் தொடங்கியது, அடுத்த ஆண்டே அது உலகளாவிய நிகழ்வாக மாறியது . உலக காண்டாமிருக தினத்தின் முக்கியத்துவம்: பல வனவிலங்கு இனங்களைப் போலவே, காண்டாமிருகங்களும் வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தக அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. சர்வதேச […]

சுமார் 375 பொருட்களுக்கான குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வருவதால், சமையலறைப் பொருட்கள், மின்னணு பொருட்கள், மருந்துகள் மற்றும் உபகரணங்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை இன்று முதல் விலை குறையும். அந்தவகையில், 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கு அரசு மிகப்பெரிய ஜிஎஸ்டி குறைப்பை அறிவித்துள்ளது. “புற்றுநோய், அரிய நோய்கள் அல்லது கடுமையான நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மூன்று உயிர்காக்கும் மருந்துகள் 5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளன. பல மருந்துகள் 12 […]

சிறுவயதிலிருந்தே உடல் பருமனால் அவதிப்பட்டு வந்த 28 வயதான செர்ரி என்ற பெண், ஆரோக்கியமான வாழ்க்கைக்காக மேற்கொண்ட முயற்சியில் தனது உடல் எடையை அதிரடியாக குறைத்துள்ளார். சிறு வயதிலேயே எடையைக் குறைக்க அவர் எடுத்த முதல் முயற்சி தோல்வியடைந்தது. அதன் பிறகு, அவர் பல்வேறு எடை குறைப்பு முறைகளை முயற்சித்தார். ஜிம் பயிற்சி, ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனை எனப் பல முயற்சிகளை எடுத்தாலும், சீரான தன்மை இல்லாததால் மீண்டும் எடை […]

ஆசியக் கோப்பை தொடரின் ‘சூப்பர் ஃபோர்ஸ்’ ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக அரைசதம் அடித்த பிறகு பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹானின் சர்ச்சைக்குரிய கொண்டாட்ட சைகை சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. நடப்பு ஆசிய கோப்பை சீசனில் க்ரூப்- ஏவில் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி […]