காதல் திருமணம் செய்த மகளை கடத்திச் சென்று மறைத்து வைத்த பெற்றோர் அதிரடி கைது…..!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே இருக்கின்ற ஸ்ரீரங்க நாராயணபுரத்தைச் சார்ந்தவர்கள் தங்கராஜா, சுகந்தி தம்பதியினர் இவர்களுடைய மகன் முருகன் (24) டிப்ளமோ பட்டதாரியான இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் ஒப்பந்தம் நிறுவன மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகின்றார்.


இவருடைய வீட்டிற்கு அருகில் முருகேசன், பத்மா தம்பதியினர் வசித்து வருகிறார்கள்.
இவர்களுடைய மகளான சுமிதா (19) என்ற இளம் பெண் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகின்றார். இந்த நிலையில் முருகனும், சுமிதாவும் கடந்த 5️ வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்களுடைய காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வந்தவுடன் அவர்களுடைய காதலுக்கு சுமிதாவின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.

ஆகவே சென்ற ஜனவரி மாதம் 18ம் தேதி காதலர்கள் இருவரும் தங்களுடைய வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். இதற்கு நடுவே சுமுகையாவின் தந்தை முருகேசன் தன்னுடைய மகளை காணவில்லை என்று தெரிவித்து கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதோடு மட்டுமல்லாமல் அவர் தன்னுடைய மகளை கண்டுபிடித்து கொடுக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, விசாரணையில் இறங்கிய காவல்துறை முருகன் மற்றும் சுமிகா இருவரையும் மீட்டு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் அப்போதுதான் முருகனுடன் செல்வதாக தெரிவித்திருக்கிறார்.

அதன் பிறகு இருவரும் கூடங்குளத்தில் தனியாக வாடகைக்கு வீடெடுத்து தங்கி வந்தனர். இந்த நிலையில் தான் ஸ்ரீரங்க நாராயணபுரத்தில் இருக்கின்ற வீட்டிற்கு தன்னுடைய மகள் வந்ததை அறிந்து கொண்ட சுமிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று அவரை தாக்கி இழுத்துச் சென்றுள்ளனர்.

அத்துடன் அவர்களை தடுக்க முயன்ற முருகன் மற்றும் அவருடைய பெற்றோரையும் தாக்கி விட்டு சுமிகாவை காரில் கடத்திச் சென்றதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து முருகன் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.

அதனை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து சுமிகாவின் உறவினர்களான ஸ்ரீரங்க நாராயணபுரத்தை சேர்ந்த அமுதா, அனுசியா தங்கம்மாள் செல்வக்குமார், விஜயகுமார் வைகுண்ட மணி மற்றும் சுமிகாவின் சகோதரர் உள்ளிட்ட 8 பேரை அதிரடியாக கைது செய்தனர். அதே சமயம் சுமிதா மற்றும் அவருடைய பெற்றோர் தொடர்பான தகவல் கிடைக்காததால் காவல்துறையினர் இது தொடர்பாக சோதனை நடத்த தொடங்கினர்.

அவர்களை பிடிப்பதற்காக கூடங்குளம் காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் 3️ தனிப்படைகள் அமைக்கப்பட்டனர். ஆனாலும் தலைமறைவான நபர்களிடம் கைபேசி இல்லாததால் தொழில்நுட்ப ரீதியாக அவர்களுடைய இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் தான் சுமையாவின் தந்தை முருகேசனுக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நெருங்கிய நண்பர் ஒருவர் இருப்பதும், அங்கு தான் முருகேசன் தன்னுடைய மகளுடன் பதுங்கி இருக்கிறார் என்ற விவரமும் தெரிய வந்தது.

உடனடியாக அங்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் பெற்றோர் மற்றும் அந்த பெண்ணின் சித்தி அனுசுயா உள்ளிட்டோரின் கட்டுப்பாட்டில் சுமிகா மறைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து சுமிதாவை மீட்ட காவல்துறையினர் அவருடைய பெற்றோர் உட்பட மூவரையும் கூடங்குளத்திற்கு அழைத்து வந்தனர்.

அதன் பிறகு அவர்களை ராதாபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் சுமிகா தன்னுடைய கணவருடன் செல்ல விரும்புவதாக கூறினார். ஆகவே காவல்துறையினர் சுமிகாவை அவருடைய கணவர் முருகனுடன் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பெற்றோர் உட்பட மூவரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Next Post

ஆன்லைன் ரம்மியால் அடுத்த மரணம்..!! கோவை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!!

Mon Feb 20 , 2023
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளுக்குப் பலரும் அடிமையாகி வருகின்றனர். இதனால், பணத்தை இழந்து, தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எனவே, தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதிகப்படியாக எழுந்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் வெள்ளலூர் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்த மதன் குமார் (25) என்ற இளைஞர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார் நடத்திய விசாரணையில், மதன் […]
Online Rummy

You May Like