#திண்டுக்கல்: சுத்தியலால் சம்பந்தியின் கள்ளக்காதலுக்கு தீர்வு கட்டிய உறவினர்..! 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கருமநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வையப்பன் (50). இவர் அதே ஊரை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் விவசாய கூலி வேலை செய்து வந்தார்.


இதற்கிடையில் முத்துலட்சுமியும், வையப்பனும் நண்பர்களாகியுள்ளனர். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாகவும், இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த முத்துலட்சுமியின் சம்பந்தியான சக்திவேல் இருவரையும் கண்டித்துள்ளார். இதற்குப் பிறகும் வையப்பன் முத்துலட்சுமியின் கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது.

வீட்டில் வையப்பன் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு சக்திவேல் ஆத்திரமடைந்தார். அதனால் சுத்தியலால் அவரை தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த வையப்பனை மீட்டு முத்துலட்சுமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இடையகோட்டை போலீசார் வையப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

1newsnationuser5

Next Post

தாயின் கடைசி ஆசை.. ஐசியூவில் நடந்த மகளின் திருமணம்..2 மணி நேரத்தில் உயிர் போன பரிதாபம்..!

Tue Dec 27 , 2022
பீகார் மாநிலத்தில் உள்ள பாலி என்ற கிராமத்தில் லாலன் குமார் வசித்து வருகிறார். இவரது மனைவி பூனம் வர்மா, கடந்த சில நாட்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், எந்த நேரத்திலும் உயிரிழக்க நேரிடும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்ட […]
n4560077441672115519802fdb38896371b03767bdd2a927b4190f2ca4fbcb8f92e34bc15a43712c428dce7

You May Like