கோயில் பணியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் சாப்ரா மாவட்டத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் மத நிகழ்வின் போது மேடையில் விழுந்து மாரடைப்பால் மரணமடைந்தார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மரணமடைந்த நபர், பேராசிரியர் ரணஞ்சய் சிங் என்பதை தெரிய வந்துள்ளது. மத விழா நடைபெற்ற மாருதி மானஸ் கோயிலின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றினார்.
நேற்று முன்தினம் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது, திடீரென நடுவில், சிங் மேடையில் மயங்கி விழுந்தார். பின்னர் மாரடைப்பால் இறந்தார். சிங் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவரை சாரி சோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.