ஆயிரக்கணக்கான பாடல்கள், எண்ணற்ற சாதனைகள்… எஸ். ஜானகியின் சொத்து மதிப்பு பற்றி தெரியுமா?

legendary playback singer s janaki passes away at 88 nation pays tribute 2026 07 12

பின்னணி பாடகர்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் இசைக்குயில் எஸ். ஜானகி. பல தசாப்தங்களாக இந்திய திரையிசையில் தனது இனிமையான குரலாலும், அபாரமான பாடும் திறமையாலும் ரசிகர்களை கவர்ந்த அவர், பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். அவரது இசைப் பயணத்தைப் போலவே, பாடும் முறைகள் மற்றும் சொத்து மதிப்பு குறித்த தகவல்களும் அவ்வப்போது ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகின்றன.


எஸ். ஜானகி பல மொழிகளில் பாடியிருந்தாலும், ஒவ்வொரு மொழியின் உச்சரிப்பையும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்துவதில் தனித்துவமான அணுகுமுறையைப் பின்பற்றியதாக கூறப்படுகிறது. தமிழ் மற்றும் இந்தி பாடல்களை அந்தந்த மொழிகளிலேயே எழுதிப் பாடிய அவர், தெலுங்கு மற்றும் சில பிற மொழிப் பாடல்களை தனக்கு நன்கு பரிச்சயமான தெலுங்கு எழுத்தில் குறித்துக்கொண்டு பயிற்சி செய்து பாடுவதை வழக்கமாக வைத்திருந்ததாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவே பிற மொழிகளின் உச்சரிப்பை சரியாகப் பாட அவருக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.

மகிழ்ச்சி, சோகம், காதல், பிரிவு, தாய்மை, ஏக்கம், கொண்டாட்டம் என பல்வேறு உணர்வுகளை தனது குரல் மூலம் உயிர்ப்பித்த எஸ். ஜானகி, ஒவ்வொரு பாடலிலும் கதாபாத்திரத்தின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் பாடியதன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

அவரது குரல் மாறுபாட்டுத் திறமைக்கு எடுத்துக்காட்டாக 1994-ஆம் ஆண்டு வெளியான ‘மகளிர் மட்டும்’ திரைப்படம் குறிப்பிடப்படுகிறது. இளையராஜா இசையிலும், கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடலில் இடம்பெற்ற மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறு குரல் பாணியில் பாடி அவர் பலரின் பாராட்டைப் பெற்றார். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பேச்சு நடை மற்றும் குணநலனுக்கு ஏற்றவாறு தனது குரலை மாற்றிப் பாடிய திறமை, அவரது இசைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 48 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்திய திரையிசை உலகின் மிகச் சிறந்த பின்னணி பாடகிகளில் ஒருவராக எஸ். ஜானகி கருதப்படுகிறார்.

இதனிடையே, எஸ். ஜானகியின் சொத்து மதிப்பு குறித்த தகவல்களும் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. எனினும், அவரது சொத்து மதிப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதேசமயம், சென்னை, ஹைதராபாத் மற்றும் மைசூர் உள்ளிட்ட நகரங்களில் அவருக்கு குடியிருப்பு வீடுகள் மற்றும் சில அசையா சொத்துகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன.

Also Read: எச்சரிக்கை! பால்கனி சுவரில் சாய்ந்து துணி உலர்த்திய பெண்… சுவர் இடிந்து விழுந்ததில் பெண் படுகாயம்!

Saranya

Next Post

ஆண்களே… முகம் பளிச்சுன்னு ஜொலிக்கணுமா? அப்போ வீட்டிலேயே இதை ட்ரை பண்ணிப் பாருங்க!

Mon Jul 13 , 2026
கடுமையான வெயில், காற்று மாசுபாடு மற்றும் தூசி போன்ற காரணங்களால் சருமம் அதன் இயற்கையான பொலிவை இழப்பது மிகவும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக நீண்ட நேரம் வெளியில் இருப்பவர்களுக்கு முகம் கருமையாகத் தோன்றுதல், எண்ணெய் பசை அதிகரித்தல், பருக்கள் வருதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் சருமத்திற்கு போதுமான பராமரிப்பு அளிப்பது அவசியம். பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களின் சருமம் சற்று தடிமனாகவும், […]
images 19

You May Like