பள்ளி & கல்லூரி மாணவர்கள் அரசு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்…! சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!

School students 2025

சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவ மற்றும் மாணவிகளுக்கான விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசால் சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவர் மற்றும் மாணவிகளுக்கென 28 பள்ளி மாணவர் விடுதிகள், 9 பள்ளி மாணவி விடுதிகள் என 37 மாணவ, மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளும், 5 கல்லூரி மாணவர்கள், 6 கல்லூரி மாணவிகள் என 11 மாணவ, மாணவிகளுக்கான கல்லூரி விடுதிகளும் என 48 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்புவரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் அனைத்து விடுதி மாணவ, மாணவிக்கும் மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

குறிப்பாக, 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 இணைச் சீருடைகள் தைத்து வழங்கப்படும். அதேபோன்று, 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு NEET / JEE நுழைவுத்தேர்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும். கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜமக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிக்கு ஆண்டுதோறும் பாய்களும் வழங்கப்படும். மேலும், பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகள் வழங்கப்படும்.

பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கும் மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்குப் பொருந்தாது. தகுதியுடைய மாணவிகள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக அறை எண்.110-இல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளைப் பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகின்ற 18.06.2025-க்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகின்ற 15.07.2025-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.

Read More: மாணவர்களே… இந்த டிகிரி முடித்தாலும் இனி அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்…! தமிழக அரசு அரசாணை…!

Vignesh

Next Post

RIP| பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் காலமானார்!. அகமதாபாத் விமான விபத்து குறித்த கடைசி ட்வீட்!.

Fri Jun 13 , 2025
90 களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கரிஷ்மா கபூர். இவர் அதிகப்படியாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். நடிகை கரிஷ்மா கபூர்-சஞ்சய் கபூர் ஆகிய இருவரும் 2003-ம் ஆண்டு திருமணம் […]
karishma kapoor ex husband 11zon

You May Like