ஆபாச படத்தை காட்டி 16 வயது சிறுமியை சீரழித்த லாரி ஓட்டுநர்…..!

பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற நபர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.இதனை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் ஒருபுறம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாலும் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், சிக்காமல் இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் அனைத்து இடங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.


அப்படி எச்சரிக்கை இல்லாமல் நம்மிடம் வந்து சிரித்து பேசும் எல்லோரிடமும் நாம் ஏனோ, தானோ என்று இருந்து விட்டால் நிச்சயமாக அவர்கள் நம்முடைய வாழ்க்கையையே சீரழிக்கும் செயலில் ஈடுபடலாம்.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள வெள்ளக்குளம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால் இவருடைய மகன் மணிகண்டன் (29) லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வரும் இவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு 16 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை தெரிவித்து பழகி வந்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், அந்த மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத முள் தோப்பு என்ற பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு தன்னுடைய கைபேசியில் வைத்திருந்த ஆபாச வீடியோக்களை காட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இது தொடர்பாக யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி மாணவியை அனுப்பி வைத்திருக்கிறார். ஆனாலும் இந்த சம்பவம் குறித்து தன்னுடைய தாயிடம் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சிக்குள்ளான அந்த சிறுமியின் தாயார் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார்.இந்த புகார் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Post

ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை…! புதுவையில் பயங்கரம்….!

Wed Feb 8 , 2023
சற்றேற குறைய 10 ஆண்டுகளுக்கு முன்பாக புதுவையில் கொலை, கொள்ளை, ரவுடிசம் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வந்தனர். அப்போதும் ஆட்சியில் இருந்தது ரங்கசாமி தலைமையிலான அரசு தான். இப்போதும் புதுவையில் ஆட்சியில் இருப்பது ரங்கசாமி தலைமையிலான ஆட்சி தான். தமிழகத்திலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் அதிமுக ஆட்சி காலத்தில் இது போன்ற சம்பவங்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை என்பதே உண்மை. […]
murder

You May Like