தொடங்கியது கோடை காலம்……! கோடை விடுமுறையில் உயர் நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

பொதுவாக மே மாதம் உயர் நீதிமன்றத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு அந்த கோடை காலங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு நீதிபதிகள் அமைக்கப்படுவார்கள்.


அந்த நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வுதான் கோடை காலத்தில் தாக்கலாகும் வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும். இது எப்போதும் இருக்கின்ற ஒரு நடைமுறைதான் என்றாலும் கூட தற்போது இதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அதாவது சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா உள்ளிட்ட 29 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள் என்றும் உயர்நீதிமன்றத்தில் மே மாதம் முதல் வாரம் மட்டும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மனுத்தாக்களும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் விசாரணையும், நடைபெறும் எனவும் மற்ற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனு தாக்கல் மற்றும் புதன் வியாழன் உள்ளிட்ட கிழமைகளில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தினமும் இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!! சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் சாப்பிடுங்க..!!

Fri Apr 28 , 2023
சிவந்த நிறத்தில் இருக்கக் கூடிய அத்திப்பழத்தை நேரடியாகவும் சாப்பிடலாம், உலர் பழமாகவும் சாப்பிடலாம். இனிப்புச் சுவை கொண்ட இப்பழம் மென்று சுவைத்து சாப்பிடும் வகையில் இருக்கும். நாம் புதிதாக வாங்கும் அத்திப்பழங்களைக் காட்டிலும் உலர வைக்கப்பட்ட அத்திப்பழங்கள் நீண்ட காலத்திற்கு இருக்கும். இவை மல்பெர்ரி குடும்ப வகையைச் சேர்ந்தவை. அது மட்டுமல்ல, எண்ணற்ற விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அத்திப்பழம் கொண்டிருக்கிறது. நார்ச்சத்து : நம் உடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து […]
தினமும் இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!! சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் சாப்பிடுங்க..!!

You May Like