சென்னை பெருங்குடியில், வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சட்ட பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில; சென்னை பெருங்குடியில், வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார், அரியலூர் வழக்கறிஞர் சாமிநாதன், தர்மபுரி வழக்கறிஞர் சிவக்குமார் என தொடர்ந்து […]

தமிழக பாரதி ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் மீது பொய் வழக்கு போடப்பட்டு இருப்பதாக தமிழக அரசை கண்டிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்து பேச முயற்சி செய்தார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த பாஜகவின் மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் உடனடியாக அவரிடம் இருந்து […]

பாஜகவில் இருந்து அடுத்தடுத்து விலகிய ஐ.டி. விங் நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டியில் பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர். பாஜக-வின் ஐ.டி. விங் மாநில தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்த சில நிமிடங்களிலேயே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் […]

வதந்தி பரப்பியவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிற பொய்யான செய்தியை வேண்டுமென்றே சமூக ஊடகங்களின் மூலமாகப் பரப்பி, நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். இது திட்டமிட்ட […]

வடமாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களின் மூலமாக போலியான காணொளிகள் வெளியாகி இருந்தனர். இதன் காரணமாக, புலம்பெயர் தொழிலாளர்கள் இடையே அச்ச உணர்வு ஏற்பட்டதால் தொடர்வண்டிகள் மூலமாக சொந்த ஊருக்கு திரும்புவதாக தகவல் கிடைத்தனர். ஆனாலும் தாங்கள் அனைவரும் கோலி பண்டிகையை கொண்டாடுவதற்காகவே செல்வதாக தொழிலாளர்கள் கூறினர். வட மாநில தொழிலாளர் தொழிலாளர்கள் பயம் கொள்ள தேவையில்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.புலம்பெயர் தொழிலாளர்கள் […]

குரூப் 2 தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசுத் துறைகளில், குரூப் 2 மற்றும் 2A பணிகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த 25-ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பிரதானத் தேர்வில், பல முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தேர்வு எழுதிய […]

ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட சம்பத்தில் மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஆளுநர் ரவியை சந்தித்து வேதனையை தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் பிரபு என்பர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்ததோடு, போராட்டத்தையும் நடத்தியது. அதன்படி நேற்று சென்னையில் ஓமந்தூரார் மருத்துவமனை முதல் போர் நினைவுச் சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி […]

ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகின்ற நிலையில், அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் களைகட்ட தொடங்கியது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக திமுக என்று இரு கட்சிகளும் மட்டும் இல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் மிக தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அண்ணாமலை இடைத்தேர்தலில் பிரச்சாரம் […]

திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் 21-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. திமுகவினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள் விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பட்டப் பகலில், நாட்டைக் காக்கும் பிரபு என்கிற ராணுவ வீரர், திமுகவின் நிர்வாகியால் […]

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த இடை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட இரு கட்சிகளும் மிகத் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு இந்த இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியின் சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களை […]