சென்னையில் மீன் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் வன்னியர் தெருவை சேர்ந்த யுவராஜ், பிளம்பர் வேலை பார்த்து வருகின்றார். அவருடைய மனைவி கவுசல்யா வீட்டில் குழந்தையை பார்த்துக் கொண்டு வருகின்றார். வழக்கம் போல் யுவராஜ் மனைவியிடம் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால், கவுசல்யா வீட்டு வேலைகளை […]
Chennai
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கேரள-தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, […]
சென்னையில் வாகன சோதனையில் இளைஞர்கள் விட்டுச் சென்ற பையை சோதனை செய்தபோது பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது. சென்னையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக 3 இளைஞர்கள் பைக்கில் வந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தியபோது நிற்கவில்லை. போலீசார் துரத்திச் சென்றபோது பை மட்டும் கிடைத்துள்ளது. அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பினர். அந்த பையை சோதனை செய்தபோது அவர்களில் ஒருவர் நாகூர் மீரான் என்பது தெரியவந்தது. நாகூர் மீரான் வைத்திருந்த […]
சென்னை மாநகரில் அடையாறு பகுதியில் பெண் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் . புகாரில் , ராம் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தன்னை ஒருவர் இடித்து கீழே தள்ளியதாகவும், அதன் பின்னர் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டார் எனவும் கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது […]
சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையில் சென்ற மாதம் 26-ம் தேதியிலிருந்து புதிதாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, அபராத தொகையானது பல மடங்காக அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சமீபத்தில் நாகராஜன் என்ற போக்குவரத்து ஆய்வாளர் வாகன ஓட்டி ஒருவரிடம் மிரட்டி லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அபராதம் விதிக்கும் அதிகாரம் சிலருக்கு […]
சென்னை பகுதியில் அசோக்நகரில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர், மனோஜ் சார்லஸ் என்பவரை கடந்த 3 வருடங்களாக காதலித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மனோஜ் சார்லஸ் கவிதாவை திருமணம் செய்கிறேன் என்று ஆசைவார்த்தைகளை கூறி, கொஞ்ச கொஞ்சமாக ரூ.60 லட்சத்தை பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கவிதா கேட்டுள்ளார். பல்வேறு காரணங்களை கூறி திருமணம் செய்யாமல் தவிர்த்துள்ளார். அத்துடன் கவிதாவிடம் பேசுவதையும் தவிர்த்துள்ளார். இதனையடுத்து, […]
தமிழ் சினிமா திரைப்பட உலகில் எல்லாம் அவன் செயல் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் ராதாகிருஷ்ணன் தன்னுடைய மனைவியுடன் சென்னை டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வந்துள்ளார். மனைவி தனியாக வீட்டில் இருந்த நிலையில், பின்புறமாக வந்த மர்ம நபர்கள் ஆயுதங்களை காட்டி அவரை கட்டிப் போட்டுவிட்டு, வீட்டில் இருந்த ரொக்கம் ரூ.2 லட்சம் மற்றும் 200 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் […]
தற்போதைக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறாது என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். இதனால் 11,12 ஆகிய தேதிகளில் ஓரு சில இடங்களில் மிகக் கனமழைபெய்யும். தமிழகம் […]
சென்னை பகுதியில் அண்ணா நகரில் மருத்துவர் ரெஜினா வசித்து வருகிறார். கனடா நாட்டில் வசிக்கும் தன்னுடைய மகளுக்கு சில பொருட்களை பார்சல் அனுப்புவதற்காக சர்வதேச கொரியர் நிறுவனங்கள் பற்றி இணையதளத்தில் தேடியிருக்கிறார். இந்த நிலையில் ப்ளூ டாட் கொரியர் சேவை என்ற பெயரில் ஒரு டோல் ஃப்ரீ எண் இருந்தது. குறிப்பிடப்பட்டுள்ள அந்த எண்ணை தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டார். அப்போது , அனுப்பக்கூடிய பொருட்கள், அவருடைய விவரங்கள் மற்றும் […]
சென்னையில் டெங்கு காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் என்பவர் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ராகஸ்ரீ என்ற மகள் உள்ளார். 2-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், ஜமீன் பல்லாவரத்தில் உள்ள […]