உணவுப் பொட்டலங்கள் மற்றும் பார்சல்களை மூடுவதற்கு உலோக பின் (metallic pins), போன்ற பொருட்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அனைத்து உணவு வணிக நிறுவனங்களுக்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.. இது தொடர்பான புதிய வழிகாட்டுதலையும் FSSAI வெளியிட்டுள்ளது. இந்த பொருட்களைத் தவறுதலாக உட்கொள்வதால் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய காயங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை அவசியம் என்று FSSAI தெரிவித்துள்ளது. […]
FSSAI
இந்திய மாம்பழ விவசாயிகளுக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜப்பானை தொடர்ந்து இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு நேபாளம் தடை விதித்துள்ளது. இந்த மாம்பழங்களில் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் இருப்பதாகக் கூறப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன், எல்லைப் பகுதிகளில் தனிமைப்படுத்தல் (quarantine) வசதிகள் இல்லாததும் இதற்கொரு காரணமாகும். இந்தத் தடையின் காரணமாக, உள்நாட்டுச் சந்தைகளில் தற்போது உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. கோடைக்காலத்தில் மாம்பழங்களுக்கு அதிக தேவை உள்ளது. […]
FSSAI Guidelines for Fermented Foods You Should Know During Summer
Why You Must Remove Fruit Stickers Before Eating, Hidden Health Risks Revealed
பிரபல மசாலா தயாரிப்பு நிறுவனம் எவரெஸ் (Everest) தயாரிப்புகளின் தரத்தை கேள்விக்குள்ளாக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சில தயாரிப்புகள் ஆய்வக பரிசோதனையில் தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு அந்த வீடியோவில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை, Trustified என்ற யூடியூப் சேனல் 2026 மார்ச் 1-ம் தேதி வெளியிட்ட வீடியோவால் தொடங்கியது. அந்த வீடியோவில், Everest நிறுவனத்தின் பல மசாலா பொருட்கள் ஆய்வகத்தில் […]
ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தை மருத்துவரான டாக்டர் சிவரஞ்சனி, சர்க்கரை நிறைந்த பானங்களை வாய்வழி நீரேற்றக் கரைசல்கள் (ORS) என்று தவறாக சந்தைப்படுத்துவதற்கு எதிராக நீண்டகாலமாகப் போராடி வருகிறார் . உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த தரநிலைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்காவிட்டால், எந்தவொரு உணவு பிராண்டும் அதன் தயாரிப்புகளில் ‘ORS’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம் (FSSAI) ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்தியாவில் […]

