உத்திரபிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஃபெரோசாபாத் மாவட்டத்தில் மணிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி ரூபி. இவர்களது வீட்டின் அருகே துளசி என்ற 11 வயது சிறுமி வசித்து […]

பெங்களூர் நகரில் 41 வயது பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக அந்த பெண்ணின் 17 வயது மகன் காவல்துறையில் சரணடைந்துள்ளார். பெங்களூர் நகரின் ஜஸ்ட் பீமையா லேஅவுட்டில் வசித்து வருபவர் நேத்ரா(41). இவரது மகன் கல்லூரியில் படித்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்த சிறுவன் தனக்கு விரைவாக உணவு சமைத்து கொடுக்குமாறு தாயிடம் கேட்டிருக்கிறார். இது தொடர்பாக தாய் […]

திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி யூடியூபர் சாட்டை துரைமுருகன் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர். தென்காசி அருகே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி இல்லத்திலும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு நிதி வாங்கியது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் […]

இந்தியாவின் புனித நகரங்களில் ஒன்றான அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தை கடந்த டிசம்பர் 30ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்திற்கு மகாரிஷி வால்மீகி விமான நிலையம் என பெயரிடப்பட்டது. கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அயோத்தி நகருக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்காக […]

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். நில மோசடி நிலக்கரி சுரங்க மோசடி மற்றும் சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை ஆகிய குற்றங்களுக்காக அமலாக்க துறையினர் ஹேமந்த் சோரனிடம் அவரது இல்லத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். 8 மணி நேர விசாரணையின் முடிவில் ஹேமந்த் சோரன் […]

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத்தை சேர்ந்த இவர் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர். ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகும் சில மாநிலங்களில் மன்னர் ஆட்சி மற்றும் சுய ஆட்சி நடைபெற்று வந்தது. . அவற்றில் இருந்து மாநிலங்களை விடுவித்து இந்தியாவுடன் இணைத்து ஒருங்கிணைந்த இந்தியா உருவாவதற்கு காரணமாக அமைந்ததால் இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படுகிறார். இவரை சிறப்பிக்கும் வகையில் […]

குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் அமைந்துள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வதோதராவின் ஏகல்பரா கிராமத்தில் அமைந்துள்ள தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தொழிற்சாலையில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்தக் கோர விபத்தில் மூன்று தொழிலாளர்கள் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் […]

ஆந்திர மாநிலத்தில் அங்கன்வாடியைச் சேர்ந்த 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் அன்னமையா பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடியில் பணியாற்றும் ஆசிரியரை பார்ப்பதற்காக ரெட்டப்பா என்ற 55 வயது நபர் வந்திருக்கிறார். அவரிடம் குழந்தைகளை சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு ஆசிரியை வெளியே சென்று இருக்கிறார். இந்நிலையில் ஆசிரியை இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரெட்டப்பா அங்கன்வாடி […]

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பாதுகாப்பு படையினர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் மோதலை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் டெகுலகுடம் கிராமத்தில் ஜகர்குண்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுக்மா கிராமத்தில் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்குவதற்காக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. […]

உலகமே பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்ட தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் ராம்கஞ்ச் மண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மதன் திலாவர். இவர் அந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை பஞ்சாயத்து ராஜ் மற்றும் சமஸ்கிருத கல்வித்துறையின் அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இந்நிலையில் காதலர் […]