உத்திரபிரதேச மாநிலத்தைச் சார்ந்த 19 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவன் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளான். விடுதியில் தங்கி படித்து வந்த மாணவனின் அறை திறக்கப்படாமல் மூடியே இருந்திருக்கிறது இதனால் சந்தேகம் அடைந்த […]

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி ஆசிரியரால் 17 வயது மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தப்பியோடிய குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டம், பக்கசார் கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரஹலாத்ரம். இவர் அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்திருக்கிறார். பின்னர் […]

மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்துக்குள்ளானதாக பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது. தலைநகர் கொல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராக இருப்பவர் மம்தா பானர்ஜி. இவர் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகிப்பதோடு ரயில்வே துறையின் முன்னாள் மந்திரியாகவும் பதவி […]

மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அசாம் ரைபிள் படை பிரிவைச் சார்ந்த வீரர் தன்னுடன் பாதுகாப்பு பணியில் இருந்த சகவீரர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சக வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய பின் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கலவரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மியான்மார் நாட்டிலிருந்து மணிப்பூர் மாநிலத்திற்குள் ஊடுருவும் […]

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவரின் சகோதரர்களால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்திருக்கும் காவல்துறையினர் தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் பதேபூர் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் நிர்வாண நிலையில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த […]

மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டி உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அவரது பேரனை கைது செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் ஜவஹர் தாலுகாவை சேர்ந்த உம்பர்வாடி கிராமத்தில் தரம்வீர் வசி என்ற 23 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் தனது பாட்டியுடன் தங்கி இருக்கிறார். இந்நிலையில் […]

இந்த வருடத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது. 2024-ஆம் வருடத்திற்கான பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாராளுமன்றத்திற்கான தேதி மற்றும் தேர்தல் நடைபெறுவது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது . பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் மத்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. மேலும் தேர்தல் நடத்துவதற்கான தேதி குறித்து மாநில தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்தி வந்த […]

1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின்சக்தி வசதி ஏற்படுத்தித் தரும் ‘பிரதமரின் சூர்யோதயா’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:”உலகின் அனைத்து மக்களும் எப்போதும் சூர்யவம்சத்தைச் சேர்ந்த பகவான் ஸ்ரீ ராமரின் ஒளியிலிருந்து சக்தியைப் பெறுகிறார்கள்.அயோத்தியில் ராமர் ஆலய பிராணப் பிரதிஷ்டை நடைபெற்றுள்ள புனிதத் தருணத்தில், நாட்டு மக்களின் வீடுகளின் மேற்கூரையில் சொந்த சூரிய […]

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் மற்றும் அவரது மனைவி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி(48). இவர் காயம்குளம் பாரதிய ஜனதா கட்சியின் மண்டல பிரிவு செயலாளராக பொறுப்பில் இருந்தார் இவரது […]

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி மாரடைப்பு மரணங்கள் தொடர்ந்து வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசு பணி தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரைச் சேர்ந்த ராஜா லோதி என்ற மாணவர் மத்திய அரசின் யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பள்ளி ஒன்றில் பயின்று வந்திருக்கிறார். இந்நிலையில் வகுப்பு நடைபெற்றுக் […]