உலக அளவில் சர்க்கரை நோய் ஆராய்ச்சியில் இந்தியா முன்னிலை வகிக்க தயாராக உள்ளதாக மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். நீரிழிவு இந்தியா என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற 3 நாள் உலக நீரிழிவு மாநாட்டில் பேசிய அவர், பல தலைமுறைகளாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் டைப் 2 நீரிழிவு நோயை பெற்றுள்ளது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சுகாதாரத்திற்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருவதாக […]
india
ஜப்பான் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.. ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொது நிகழ்ச்சியில் குண்டுவெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை ஆதரித்து ஃபுமியோ கிஷிடா வாகயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி துறைமுகத்திற்குச் சென்றார்.. அங்கு அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவரை நோக்கி மர்ம பொருள் ஒன்று விழுந்தது.. எனினும் அது சற்று […]
மகராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வழக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு கடந்த 24 மணி நேரத்தில் 1,115 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5,421 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 16.98 சதவீதமாக உயர்ந்தது. நகர சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 9 நபர்கள் உயிரிழந்துள்ளதாக […]
இந்தியாவில் அடுத்த சில நாட்களுக்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயரும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 7,000-ஐ கடந்தது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை […]
இந்திய சினிமாவின் முன்னணி நடிகரும் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சஞ்சய் தத் உங்கள் உறவில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது காயமடைந்து இருக்கிறார். பொது உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மும்பை திரும்ப இருப்பதாக வடக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சஞ்சய் தத் நடித்து வரும் கேடி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் வைத்து படமாக்கப்பட்டு வந்தது. இந்த சன் டிவியின் போது ஆக்சன் காட்சிகளில் வெடிகுண்டுகள் வைப்பது போன்று […]
கோவில்பட்டி அருகே அதிகாலை ஆட்டோவில் சென்ற பெண்ணை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது . இந்தக் கொலையை தடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநருக்கும் தலையில் சராசரியாக வெட்டு விழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வாணரம்பட்டி கிராமத்தைச் சார்ந்தவர் சண்முகராஜ் 33 வயதான இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை இவர் தனது ஆட்டோவில் 30 […]
உத்திரபிரதேச மாநிலத்தில் பெற்ற தாயே தன் பிள்ளையை தலையில் வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலம் காசிப்பூர் மாவட்டத்தில் உள்ள பீஜாரா கிராமத்தைச் சார்ந்தவர் அஜித் யாதவ் இவரது மனைவி நீது. இந்த தம்பதிக்கு பாரி என்ற மகளும் ஹேப்பி மற்றும் ஹர்திக் என்ற மகன்களும் இருந்தனர். அஜித் யாதவ் ஜம்முவில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய பணிக்காக ஜம்முவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் […]
இந்தியாவில் ஒரே நேரத்தில் கொரோனா தொற்று மற்றும் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகின்றன. கொரோனா, H3N2 என இரண்டு நோய்த்தொற்றுகளும் நுரையீரலைப் பாதிக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. எனவே, நமது நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான வழிகளில் கவனம் செலுத்த வேண்டும்.. வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் நமது நுரையீரலை வலுப்படுத்தவும் இந்த வைரஸ் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். நமது அன்றாட […]
டெல்லியில் நேற்று ஒரே நாளில் 699 பேருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வழக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு நேற்று 699 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 25.98 சதவீதமாக உயர்ந்தது. சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.டெல்லியில் கடந்த சில மாதங்களாக புதிய […]
இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவமனைகளில் இன்று மற்றும் நாளை கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள்/ கூடுதல் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாடினார். கொரோனாவின் முந்தைய பரவலின்போது செயல்பட்டது போல், தற்போதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார். […]