கேரளாவில் நடந்த ஒரு கோயில் திருவிழாவில் ஒரு யானை திடீரென ஆக்ரோஷமாக மாறி, ஒரு பூசாரியை அந்த தும்பிக்கையால் தூக்கி தரையில் வீசியது. இதனால் அவர் காயமடைந்தார். அன்னமநாத மகாதேவர் கோயிலில் ஊர்வலத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. யானை அலங்கரிக்கப்பட்டு, சடங்கு ஊர்வலத்திற்காக கோயில் வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டது. தெய்வத்தின் சிலையை யானை மீது வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​யானைப் பாகன் ஒரு பூசாரியை விலங்கின் மீது […]

கேரள அரசின் பெயரை கேரளம் என மாற்றும் திட்டத்திற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது… கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி, மத்திய அரசு கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை அம்மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது.. சட்டமன்றத் தீர்மானத்தைத் தொடர்ந்து, […]

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தடம்பட்டுத்தாளம் பகுதியில் திருமணமான தகவலை மறைத்து, இளம்பெண் ஒருவரை தனது காதலால் ஏமாற்றி வந்த வைஷாகன் (36) என்பவர், இறுதியில் அந்தப் பெண்ணையே கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இரும்புப் பட்டறை நடத்தி வந்த வைஷாகனின் இரட்டை முகமும், அவர் செய்த அருவருக்கத்தக்க செயலும் கேரள மாநிலத்தையே உறைய வைத்துள்ளது. 26 வயதான அந்த இளம்பெண், வைஷாகனுக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருப்பதை அறிந்து […]

பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி திருவனந்தபுரம் மாநகராட்சியில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ கூட்டணிக்குக் கிடைத்த இந்த மக்கள் ஆணை, “கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை” என்று அவர் கூறினார். எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “திருவனந்தபுரத்திற்கு நன்றி! திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக-என்டிஏ கூட்டணிக்குக் கிடைத்த மக்கள் தீர்பு, […]

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஐஎன்எஸ் மாஹே மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி தலைமை தாங்கினார். கொச்சியில் உள்ள கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் கட்டமைத்துள்ள ஐஎன்எஸ் மாஹே, அது வடிவமைத்த 8 கப்பல்களில் முன்னணி கப்பலாகும். பெல், எல் அண்ட் டி டிஃபென்ஸ், மஹிந்திரா டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ், என்.பி.ஓ.எல் […]

அமீபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; கேரளாவில் பரவி வருவதாக கூறப்படும் அமீபா வைரஸ் என்பது தொற்றுநோய் அல்ல. நீண்ட நாட்கள் தேங்கியுள்ள குளம் மற்றும் குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிப்பதினால் அந்த நீரில் தேங்கியுள்ள வைரஸ் மனிதனின் மூக்கின் வழியாக மூளையை சென்று உயிரைழைப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்கள் தேங்கியுள்ள நேரில் […]