கேரளாவில் கடந்த மே 24-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. வழக்கத்தைவிட முன்கூட்டியே பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வருடாந்திர தென்மேற்கு பருவமழை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் முன்னேறி வருவதால், வடமேற்கு இந்தியாவின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய பரவலான இடியுடன் கூடிய […]

வங்காளதேசத்திற்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடரில் இந்திய அனிக்கு தேர்வாகியுள்ளார் மின்னு. வயநாட்டில் உள்ள பழங்குடி சாதிகளில் ஒன்றான குரிச்சியா இனத்தைச் சேர்ந்தவர் மின்னு. சிறுமியாக இருக்கும் போதே கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக அருகிலுள்ள மைதானத்திற்கு செல்லத் தொடங்கினார். இதற்கே அவர் தினமும் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அந்த வயதில் இவருக்கு துணையாக கிரிக்கெட் விளையாட பெண்கள் யாருமே இல்லை. இதனால் இவரது வீட்டின் அருகாமையில் […]

ஏஐ கேமரா எனப்படும் செயற்கை நுண்ணறிவு பெற்ற கேமராக்களை சாலை போக்குவரத்தை பராமரிக்க பொருத்துவதா அல்லது வேண்டாமா என்கிற விவாதம் ஒரு பக்கம் நடைபெற்று கொண்டிருக்க, மறுப்பக்கம் ஏஐ கேமராக்களை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொருத்தும் பணிகளும் நடக்கின்றன. ஏஐ கேமராக்கள் மூலம் சில சமயங்களில் ஆதாரமற்ற அபராதங்கள் விதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக இந்த குற்றச்சாட்டுகள் கேரளா மாநிலத்தில்தான் அதிகளவில் எழுகின்றன. அதுமட்டுமின்றி, இந்த குற்றச்சாட்டுகள் […]

கேரளாவில்‌ உள்ள நடிகை பேர்லி மானி உட்பட 10 பிரபல யூடியூபர்கள்‌ மற்றும்‌ கன்டென்ட்‌ கிரியேட்டர்களின்‌ வீடுகள்‌ மற்றும்‌ அலுவலகங்களில்‌ வருமான வரித்துறையினர்‌ அதிரடி சோதனை நடத்தினர். வீடியோ கன்டென்ட்‌ கிரியேட்டர்கள்‌ தங்கள்‌ வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்துவதில்லை என புகார்‌ வந்ததை அடுத்து சோதனை நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். முதன்முறையாக கேரளாவில் நடிகை பேர்லி மானி உள்ளிட்ட யூடியூப் பிரபலங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை […]

எர்ணாகுளம் போக்சோ நீதிமன்றம், தனது முன்னாள் பணிப்பெண்ணின் மகளான 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போலி பழங்கால வியாபாரி மோன்சன் மாவுங்கலுக்கு ஆயுள் தண்டனை விதித்து சனிக்கிழமை தீர்ப்பளித்தது. மேலும் போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 5.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கே சோமன் உத்தரவிட்டார். கேரளமாநிலம்‌ எர்ணாகுளம்‌ மாவட்டத்தை சேர்ந்தவர்‌ வியாபாரி மோன்சன்‌மாவுங்கல்‌. இவரது வீட்டில்‌ பணி […]

கடந்த மாதம் கேரள மாநில அரசுப்பேருந்தில், திருச்சூரில் இருந்து கோழிக்கோடு சென்றபோது, மாடலும், இளம் நடிகையுமான நந்திதா சங்கரா என்பவர் முன், அவரது பக்கத்தில் அமர்ந்திருந்த 28 வயதான சாவத் ஷா என்பவர் ஆபாசமாக நடந்துக் கொண்டதாகத் தெரிகிறது. அது வைரலாகியுள்ளது. நந்திதா சங்கரா மற்றும் இன்னொரு பெண்ணுக்கு மத்தியில் அமர்ந்திருந்த இளைஞர் சாவத் ஷா, முதலில் நந்திதாவிடம் இயல்பாக பேசுவது போன்று பேச்சுக் கொடுத்துக்கொண்டே தவறாக நடக்க முயன்ற […]

கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடுத்துள்ள அருண் பகுதியைச் சேர்ந்தவர் உன்னி (40). இவரது மனைவி நீது(33) இவர்களுக்கு கடந்த 2011 ஆம் வருடம் திருமணம் நடந்தது இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், அழகாக இல்லை என்று தெரிவித்து மனைவியை கணவர் உண்ணி அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக் கொண்டு அடிக்கடி தாய் வீட்டுக்கு செல்வதை நினைத்து வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன் பிறகு […]

கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரபேக்கா ஜோசப் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரிக்கொம்பன் யானையை, அது நன்கு அறிந்த கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என வழக்கு தாக்கல் செய்திருந்தார். அரிக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் காட்டு யானை கடந்த சில நாட்களாக தேனி, கம்பம் பகுதியில் சுற்றித்திரிந்து மக்களை அச்சுறுத்தியது. கேரளா அரசு அரிசி […]

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரஹனா பாத்திமா. இவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் தனது நிர்வாண உடலில் தன்னுடைய குழந்தைகளை வைத்து ஓவியம் வரைய வைத்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் மீது போக்சோ மற்றும் IT பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் […]

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்டு அவருடைய உடல் பாகங்கள் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி காட் சாலையில் ட்ராலி பேக்கில் கிடந்தனர் சித்திக் என்று அடையாளம் காணப்பட்ட உயிரிழந்த நபர், சென்ற வியாழக்கிழமை முதல் காணாமல் போய்விட்டார் என அவருடைய மகன் புகார் வழங்கியிருந்தார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய […]