வரதட்சணை கேட்டு பெண்களைத் துன்புறுத்தும் கொடுமை இன்னும் பல குடும்பங்களில் தொடரும் நிலையில், ஹரியானாவில் வரதட்சணையாக எஸ்யூவி கார் கேட்டு இளம்பெண்ணையும் அவரது ஒன்றரை மாத குழந்தையையும் கொலை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டம் ராஜ்புரா கிராமத்தைச் சேர்ந்த சோஹில் கானுக்கும், நுஹ் மாவட்டம் சலம்பா பகுதியைச் சேர்ந்த சகுஃப்தாவுக்கும் […]

சென்னையில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்களை மறைக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்குப் பிறகு உடலை துண்டு துண்டாக வெட்டி, சில பாகங்களை சமையல் பாத்திரத்தில் வைத்து தடயங்களை அழிக்க முயன்றதுடன், மற்றொரு பகுதியை சூட்கேஸில் அடைத்து ரயிலில் விட்டுச் சென்ற சம்பவம் போலீசாரின் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற […]

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, மதுபோதையில் தொடர்ந்து தகராறு செய்து வந்த கணவனை மனைவி வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனை கொலை செய்த பின்னர் மனைவி நேரடியாக காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்துள்ளார். வாணியம்பாடி அடுத்த இளையநகரம் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (43). இவரது மனைவி ரம்யா (35). தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். […]

கள்ளக்காதல் காரணமாக ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை, இறுதியில் கொலையில் முடிந்த சம்பவம் செங்குன்றம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்த எலக்ட்ரீஷியன், தனது மனைவியின் அண்ணியுடன் கள்ளக்காதலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆத்திரமடைந்த மனைவியின் சகோதரர்கள் அவரை திட்டமிட்டு கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (32). எலக்ட்ரீஷியனாக […]

பெங்களூருவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்ய திட்டமிட்ட பெண், தனது 4 வயது மகனையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக பெண்ணையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு சிக்கபனவரா பகுதியைச் சேர்ந்தவர் அபிநந்தன் (36). இவரது மனைவி ஹரிணி (26). இவர்களுக்கு யதுவீர் என்ற 4 வயது மகன் இருந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி […]

பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த பரபரப்பான கொலை வழக்கில் மதுரை நீதிமன்றம் தற்போது முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. கணவரின் குடும்பத்தினர் நள்ளிரவில் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான இந்த வழக்கில் இளம்பெண் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, சம்பவம் நடைபெற்ற விதம், உயிரிழந்தவர்களின் நிலை மற்றும் போலீஸார் சேகரித்த ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இருதரப்பு வாதங்களும் […]

மகாராஷ்டிராவில் கணவர் காணாமல் போனதாக கூறி நாடகமாடிய மனைவி, தனது காதலனுடன் இணைந்து அவரை கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வர்தா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கணவர் திடீரென காணாமல் போனதை அடுத்து, அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதற்கிடையே, கணவரை காணவில்லை என மனைவியும் வெளியில் கூறி வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில், அப்பகுதியில் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் […]

தெலங்கானாவில் பெண்களை முன்கூட்டியே கண்காணித்து, அவர்களிடம் இருக்கும் பணம், நகை உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொண்டு, பின்னர் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் தாய் மற்றும் அவரது மைனர் மகன் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். சித்திப்பேட்டையில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கை விசாரித்தபோது, இதேபோன்று நடைபெற்ற மற்றொரு கொலைச் சம்பவத்திலும் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை நகரின் ராமக்காபேட்டை பகுதியில் உள்ள வயல்வெளியில் கடந்த 8-ம் […]

கர்நாடகாவில் கணவரும் 5 வயது மகனும் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில், வீட்டில் கிடைத்த தடயங்கள் மற்றும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆரம்பத்தில் சந்தேக மரணமாக கருதப்பட்ட இந்தச் சம்பவம், பின்னர் கொலை வழக்காக மாறியுள்ளதால், அதன் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் குணிகல் தாலுகாவைச் சேர்ந்த அபிநந்தன் […]

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் 43 வயது நபர் ஒருவர் தனது பெற்றோரையே இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்துவதற்காக பணம் கேட்டு ஏற்பட்ட தகராறே இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமாக இருந்ததாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நெடுங்கண்டம் அருகே ஏழுக்கம் வயல் பகுதியில் சந்திரன் (55), அவரது மனைவி வல்சம்மா (50) ஆகியோர் வசித்து வந்தனர். விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்த […]