பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி 33 நாடுகளுக்கு எடுத்துரைப்பதற்காக சென்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளின் குழு அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளனர். கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தளத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் […]

விவசாயிகளுக்கான வட்டி தள்ளுபடியைப் பராமரிப்பது தொடர்பாக நேற்று புதன்கிழமை (மே 28) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 2025-26 காரீஃப் பருவத்திற்கான நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) குவிண்டாலுக்கு ரூ.69 அதிகரித்து ரூ.2,369 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு ரூ.2 லட்சத்து 7 ஆயிரம் கோடி செலவாகும். கடந்த 10-11 ஆண்டுகளில், காரீஃப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் […]

குஜராத்தின் காந்திநகரில் பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 1947 இல் காஷ்மீர் மீதான தாக்குதலைக் குறிப்பிட்டார். அந்த தாக்குதலை பற்றி இப்போது பார்க்கலாம். பிரதமர் மோடி தற்போது குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார், குஜராத்தில் உள்ள காந்திநகரில் இரண்டு கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ மேற்கொண்டார். நேற்று காந்திநகரில் பொதுமக்களிடையே உரையாற்றிய பிரதமர், 1947 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த ஒரு தாக்குதலைப் பற்றி குறிப்பிட்டார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு , […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலனை, எல்எம்வி3 ராக்கெட் உடன் ஒருங்கிணைத்து 2.35 மணிக்கு விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து 179 கிமீ நீள்வட்டப்பதையில் சந்திராயன் 3 நிலை நிறுத்தப்பட்டது. எல்.வி.எம் 3 எம்4 S200 திட பூஸ்டர் ராக்கெட்டில் இருந்து பிரிந்துவிட்ட நிலையில். சந்திரயான் 3 வின்கலத்தைச் சுமந்து செல்லும் LVM 3 M4 ராக்கெட்டின் முதல் 3 அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்தன. சந்திராயன் 3 […]

இந்தியா முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும், நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேவை ஏற்பட்டால் எல்லை தாண்டி இந்தியா தாக்குதல் நடத்தும் என்றும், நாடு முன்பு இருந்ததைப் போல இல்லை என்றும் நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதாகவும் கூறினார். பாகிஸ்தானில், எல்லை தாண்டிய பயங்கரவாதிகள், புல்வாமாவில் தாக்குதல் நடத்திய போது, […]

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் பேச்சு குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் சிறுபான்மை இன மக்களின் நிலை குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறிய கருத்துக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு தற்பொழுது எகிப்து நாட்டிற்கு அரசு முறை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் […]

மத்திய ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என […]

அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று மதியம் 12 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும். கவுகாத்தியை நியூ ஜல்பைகுரியுடன் இணைப்பதில், தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இந்த ரயில் சுமார் ஒரு மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும். வந்தே பாரத் ரயில் இந்தப் பயணத்தை 5 […]

ஆதீனங்கள் முன்னிலையில்‌ புனித செங்கோலை மதுரையின்‌ 293 ஆவது தலைமை ஆதீன சுவாமிகள்‌ பிரதமர்‌ நரேந்திர மோடியிடம்‌ வழங்கப்பட்டது. நாடாளுமன்றத்தின்‌ புதிய கட்டிடம்‌ இன்று பிரதமர்‌ நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார்‌. இந்நிலையில்‌, டெல்லி சென்ற 21 ஆதீன சுவாமிகள்‌ அமைச்சர்கள்‌ மற்றும்‌ மற்ற ஆதீனங்கள் முன்னிலையில்‌ புனித செங்கோலை மதுரையின்‌ 293 ஆவது தலைமை ஆதீன சுவாமிகள்‌ பிரதமர்‌நரேந்திர மோடியிடம்‌ நேற்று வழங்கினார்‌. நாடாளுமன்றத்தின்‌ புதிய கட்டடம்‌ இன்று […]

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி மீது திடீரென தொண்டர் ஒருவர் தனது மொபைல் போனை தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள மைசூருவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு மீறலில் பிரதமர் வாகனத்தின் மீது மொபைல் போன் ஒன்று வீசப்பட்டது. காவல்துறையின் கூற்றுப்படி, பெண் பாஜக தொண்டர் “உற்சாகத்தில்” தொலைபேசியை எறிந்தார், மேலும் […]