நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்த பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1, 2025) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பரமக்குடி நெடுஞ்சாலைத் திட்டத்தை அமைப்பதற்காக வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை , ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டம் , […]

நாடு முழுவதும் இரயில் கட்டணத்தை உயர்த்துவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என ரயில்வே இணையமைச்சர் சோமண்ணா விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் பொது மக்கள் அதிகமாக ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். நெடுந்தூரத்தையும் குறைந்த நேரத்தில் கடந்துவிடுவதோடு, பேருந்து கட்டணத்தை விட மிக மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதுதான் இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. மேலும், ரயில்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. இந்த […]

இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் அவசரநிலை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.. அவசரநிலையின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அரசியலமைப்பின் உணர்வு எவ்வாறு மீறப்பட்டது, பாராளுமன்றத்தின் குரல் எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்பதை எந்த இந்தியரும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.. இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்கள் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தொடர்ச்சியான பதிவுகளில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். […]

ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைக் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை, அமெரிக்க ராணுவம் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan), மற்றும் நடான்ஸ் (Natanz) ஆகிய முக்கிய அணுசக்தி உற்பத்தி தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல்கள், […]

“இன்றைய கலவரமான காலகட்டத்தில், யோகா அமைதியை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவி. இது மனிதன் உள்ளமைவையும் உடலையும் ஒருங்கிணைக்கும் ஒரு சக்தி என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஏராளமானோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது பேசிய மோடி, 11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள […]

5 நாள் பயணமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலையில் கனடா சென்றார். பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். கடைசி நாளான நேற்று மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, ​​பிரதமர் மோடி ஜி7 அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். “இந்தியா மற்றும் கனடா […]

265 உயிர்களை காவு வாங்கிய அகமதாபாத் விமான விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார். பாஜகவில் இருந்தாலும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. தனது எக்ஸ் தளத்தில் பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வரும் சுப்பிரமணியன் சுவாமி நேற்று நடைபெற்ற விமான விபத்து தொடர்பாக பதிவிட்டு […]