ஈரானின் முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைக் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினார். இந்திய நேரப்படி இன்று அதிகாலை, அமெரிக்க ராணுவம் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan), மற்றும் நடான்ஸ் (Natanz) ஆகிய முக்கிய அணுசக்தி உற்பத்தி தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல்கள், […]
PM Modi
“இன்றைய கலவரமான காலகட்டத்தில், யோகா அமைதியை ஏற்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவி. இது மனிதன் உள்ளமைவையும் உடலையும் ஒருங்கிணைக்கும் ஒரு சக்தி என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஏராளமானோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டார். அவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது பேசிய மோடி, 11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள […]
Union Minister Amit Shah has said that English speakers in the country will soon be ashamed.
5 நாள் பயணமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலையில் கனடா சென்றார். பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு கனடாவுக்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். கடைசி நாளான நேற்று மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடி ஜி7 அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். “இந்தியா மற்றும் கனடா […]
The black box of the Air India flight that crashed in Ahmedabad has been recovered.
265 உயிர்களை காவு வாங்கிய அகமதாபாத் விமான விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி வலியுறுத்தியுள்ளார். பாஜகவில் இருந்தாலும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்து வருபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. தனது எக்ஸ் தளத்தில் பல்வேறு விஷயங்களில் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வரும் சுப்பிரமணியன் சுவாமி நேற்று நடைபெற்ற விமான விபத்து தொடர்பாக பதிவிட்டு […]
நாடு முழுவதும் கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அமைச்சர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டிய நிலையில், தொற்று பரவல் குறித்து கவலை அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 306 புதிய கோவிட்-19 வழக்குகளும், ஆறு இறப்புகளும் […]
செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். ஈபிள் கோபுரத்தை விட உயரமான இந்தப் பாலம், ரூ.1,486 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலத்தை கட்டி முடிக்க 8 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. மேலும் இது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். செனாப் ரயில் பாலம் ஆற்றில் இருந்து 359 மீட்டர் […]
Pm Modi Fitness Secret : 74 வயதிலும் நரேந்திர மோடியைப் போல ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமா? அவரின் ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து தற்போது பார்க்கலாம்.. 74 வயதிலும் பிரதமர் நரேந்திர மோடியின் உடற்தகுதி மற்றும் ஆற்றலைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். தொடர்ந்து வேலை செய்தாலும் சரி, தொடர்ச்சியான சர்வதேச சுற்றுப்பயணங்களின் பரபரப்பான அட்டவணையில் இருந்தாலும் சரி, அவர் ஒருபோதும் சோர்வாக காணப்பட்டதே இல்லை.. அதிகாலையில் யோகா செய்வது […]
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி 33 நாடுகளுக்கு எடுத்துரைப்பதற்காக சென்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளின் குழு அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளனர். கடந்த ஏப்ரல் 22-ந்தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தளத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் […]