பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு இவை வழங்கப்பட உள்ளது. பொங்கல் ரொக்கப் பணம் தமிழகத்தில் […]
ration shop
மயிலாடுதுறை மாவட்டம், கோமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் தேரழந்தூர் நியாய விலைக் கடையில், எந்த தேர்வு நடைமுறைகளும் பின்பற்றாமல், அனிதா என்பவர் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி, அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், விற்பனையாளர் பணிக்கு தேவையான கல்வித்தகுதி மற்றும் வயது தகுதியுடையோர் ஏராளமாக உள்ள நிலையில், உரிய தகுதியைப் பெறாத அனிதா என்பவர் எந்த […]
நியாய விலைக் கடைகளின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த கூடுதல் வருவாய் வழிகளை ஆராயுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத் துறை செயலர்களை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். மாநில மற்றும் யூனியன் பிரதேச உணவுத்துறை செயலர்கள் மாநாட்டில், தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படும் பொது விநியோக நடைமுறைகள் பற்றி அதன் செயலாளர் விளக்கினார். உணவு தானியங்கள், மளிகை பொருட்கள், திணை வகைகள் […]
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாக ஆங்காங்கே புகார்கள் வந்த நிலையில், பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி ஏப்ரல் 1 முதல் ரேஷன் கடைகலீல் செறிவூட்டப்பட்ட அரிசி கிடைக்கும் என கூறினார். மேலும் பேசிய அவர், […]
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உணவு மற்றும் பொது விநியோகத் துறை 2022ம் ஆண்டிலும் தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. பிரதமரின் ஏழைகளுக்கான பிரதமரின் உணவு தானியத் திட்டம், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டம், செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், செயல்பட்டுள்ளது. பிரதமரின் ஏழைகளுக்கான உணவுத் தானிய […]
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, டிசம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான இன்று ஒவ்வொரு வட்டாட்சியர் […]
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பாக நாளை குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் குடும்ப அட்டை தொடர்பான புகார்கள் குறைகளை தீர்க்க தமிழக அரசு ஒவ்வொரு வட்டத்தில் குறைதீர் முகாம்கள் நடத்தபடுமென அறிவித்திருந்தது. அந்த அடிப்படையில் சென்னையில் உள்ள மக்கள் வரும் 10ம் தேதி மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 1 மணி […]
நாடு முழுவதும் இலவச ரேஷன் வழங்கும் வசதியுடன், போர்ட்டபிள் ரேஷன் கார்டு வசதியையும் மத்திய அரசு அரசு தொடங்கியுள்ளது. இந்த வசதி ஒரு சில மாநிலங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இதைத் தொடங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள ஒரே மாநிலமான அசாம், இந்த ஆண்டு செப்டம்பரில் திட்டத்தை செயல்படுத்த தொழில்நுட்ப ரீதியாக தயாராகி வருகிறது. […]
கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ 11.7 லட்சம் மதிப்புள்ள 1809 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் அல்லது சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் […]
ரேஷன் கடைகளை மாற்றியமைப்பதற்கான சிறந்த நடைமுறைகளில் ஒன்று தமிழக அரசு என நிரூபித்துள்ளது என பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக அரசை மத்திய அரசு புழ்ந்துள்ளது. தமிழக ரேஷன் கடைகள் சிறந்த மாற்றங்களை கொண்டுள்ளதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது. இது நம்பகத்தன்மையை மேம்படுத்தியுள்ளது எனவும் கூடுதல் வருவாய் வழிகளை ஆராய மற்ற மாநிலங்கள் வேறு வழிகளை ஆராய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. உணவுத்துறைச் செயலாளர்கள் மாநாட்டிற்கு பின்னர் மத்தியஅஉணவு அமைச்சகம் […]