டெல்லி நீதிமன்றத்தில் பெண் நீதித்துறை அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. 2015 அக்டோபரில், நீதிமன்ற அறைக்குள் பெண் நீதிபதியை துஷ்பிரயோகம் செய்ததற்காக தனக்கு விதிக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு […]

2025 நீட் முதுகலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும் என்ற உத்தரவைத் தொடர்ந்து, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு தேர்வை மாற்றியமைக்க உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. 2025-ம் ஆண்டுகான நீட் முதுகலை தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. எனினும் அன்றைய தினம் இரண்டு ஷிப்டுகளாக தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை […]

தமிழக பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து, மாநில அரசுக்கு மாற்றம் செய்து, சட்டத்தில் திருத்தம் செய்து, 10 சட்ட மசோதாக்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசாங்கம் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு […]