fbpx

சென்னையில் நேற்று தொடர் செயின் பறிப்பு சம்பவங்களின் மூளையாக செயல்பட்ட ஜாபர் குலாம் ஹுசைன், போலீஸ் என்கவுண்டரில் உயிரிழப்பு.

சென்னையில் நேற்று காலை, 6 மணி முதல் 7:10 வரையிலான, ஒரு மணி நேரம், 10 நிமிடங்களில், சைதாப்பேட்டையில் துவங்கி வேளச்சேரி வரை, ஆறு பெண்களிடம், 22 சவரன் வரை செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. …

அமலாக்கத்துறையின் சோதனையின் போது தாங்கள் நடத்தப்பட்ட விதம் சட்டவிரோதமானது மட்டுமின்றி, மனிதத்தன்மை அற்ற செயல் என டாஸ்மாக் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் …

வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் சென்னை மாநகராட்சியில் சமர்ப்பிக்கப்படும் கட்டிட திட்ட அனுமதி விண்ணப்பங்களை onlineppa.tn.gov.in என்ற தமிழ்நாடு ஒற்றைச் சாளர இணையதளம் மூலம் தான் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், 31.03.2025 மற்றும் அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறையிலேயே ஒப்புதல் வழங்கப்படும்.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி …

மின் கணக்கீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் செல்போன் வாங்க 10,000 ரூபாய் மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மின் கணக்கீடு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்படுகிறது. மின் ஊழியர்கள் நேரடியாக கணக்கீடு செய்து வாடிக்கையாளர்களுக்கு மின் பயன்பாடு மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இ-மெயில், SMS மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு மின் …

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கிவருகிறது. அதன் அடிப்படையில் இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி (Innovation Fellowship program) வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியானது கணினி பொறியியல் நிபுணத்துவம் (System Engineering expertise) புதுமைத்திறன்களை வழங்குதல் …

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் கோடை வெப்பத்தினால் அதிகம் பாதிக்கப்படுவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் கோடை வெயில் அதிகரித்துவரும் சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தினரையும், வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய வழிமுறைகளைப் பின்பற்ற …

TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் திண்டுக்கல் மாவட்டம், …

தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயருகிறது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின்கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகள் உட்பட தமிழகம் முழுவதும் 40 சுங்கச்சாவடிகளில் வரும் …

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றிய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், ‘கழிவுநீர் அகற்று சேவை வாகனங் கள் ஒப்பந்தம்’ தொடர்பாக விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, சவுக்கு சங்கர் தங்களை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள …

Senthil Balaji: தமிழ்நாட்டில் போதுமான அளவு மின்சாரம் இருப்பு உள்ளது என்றும் 2030-ம் ஆண்டு வரை பிரச்சனை இருக்காது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், …