இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை (ஜூன் 29) கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் விழாவாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு, புத்தாடைகள் அணிகள் இஸ்லாமிய மக்கள் பக்ரீத் வாழ்த்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். மேலும் தங்கள் வீடுகளில் உயிரினங்களை இறைவனின் பெயரால் பலிகொடுத்து மூன்று சம பங்குகளாக பிரித்து ஒரு பங்கு வீட்டுக்கும், […]
Tamilnadu
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் அரங்கூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் பயன்படுத்தும் மயானமொன்று உள்ளது. அந்த மயானத்தில் கம்பி வேலி அமைத்து தென்னை மரம், மாமரம், பலாமரம், கொய்யா மரம் போன்ற நலனும் நிழலும் தரும் மரங்களை கடந்த 16 வருடங்களாக பராமரித்து வந்துள்ளார் விவசாயியொருவர். இதுபற்றி மாவட்ட ஆட்சித் தலைவர், தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியிருந்தார். அந்த மரங்களை எல்லாம் அர்ஜுனன் (70) என்ற விவசாயிதான் நட்டு பராமரித்து […]
பொதுவாக எல்லோரும் தங்களுடைய பள்ளிப்பருவ காலங்களை நினைத்துப் பார்க்கும்போது பரவசமடைவார்கள். ஏனென்றால் அந்த பள்ளிப் பருவ காலத்தில் தான் தற்போதுள்ள எந்தவித பிரச்சனையும் தங்களுடைய மனதை பாதிக்காமல் இருந்ததாகவும் அவர்கள் கருதுவார்கள். இன்னும் சொல்லப்போனால் நாம் பள்ளி அல்லது கல்லூரிகளில் மாணவராகவே இறுதிவரையில் இருந்திருக்கலாமோ என்று நினைக்கும் மனிதர்களும் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு மாய உலகம் அந்த மாணவர் பருவத்தில் தான் கிடைக்கும். ஆனால் அந்த மாணவர் […]
பொதுவாக பண்டிகை காலம் என்று வந்து விட்டாலே சென்னையில் இருக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் வாசிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அந்த வகையில், நாளை தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதிலும் வார இறுதி நாட்களில் இந்த பக்ரீத் பண்டிகை வருவதால் மாநிலம் முழுவதும் இருந்து தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று திரும்புவார்கள் பொதுமக்கள். ஆகவே பயணிகள் […]
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையேற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கனிசமாக குறைந்ததாலும், கடந்த வாரம் முதல் தக்காளி […]
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2023-க்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 2,29,175. அதில் பதிவுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 1,87,847. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 18,767 பேர் அதாவது 11.09 சதவீதம் பேர் அதிகம். அவ்வளவு பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் […]
தக்காளியின் உற்பத்தி குறைந்ததால் தமிழ்நாட்டில் தக்காளியின் விலை அதிகரிக்க தொடங்கியது. நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், தக்காளியின் விலையை குறைக்க வேண்டும் என இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்தனர். அனைத்து வீடுகளிலும் அத்தியாவசிய தேவையாக இருக்கும் தக்காளியின் விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். இந்த […]
தமிழ்நாட்டில் குடும்பத்தலைகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. இது தொடர்பாக நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை மிக விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்கள், மீனவ பெண்கள், […]
டிஎன்பிஎஸ்சி உதவி செயலர் பிரிவில் 59 காலியிடங்கள் இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த மே மாதத்துடன் அதற்கான காலகடு முடிவடைந்த நிலையில், வருகின்ற ஜூலை மாதம் 1ம் தேதி இதற்கான தேர்வு நடைபெற இருக்கிறது. தற்சமயம் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அந்த ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் […]
தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் 1078 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்சமயம் பேருந்து கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது பயணத்திற்கான பயணச்சீட்டை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக பதிவு செய்யும்போது திரும்பி வருவதற்கான பயண சீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்படும். […]