ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சென்னை உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.87 கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருப்பதாக சமூகத் தணிக்கையில் கண்டறியப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. […]

தேர்தல் ஆணையம் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 29ஏ-ன் கீழ் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு செய்கின்றன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் அவை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதன் படி மேற்கொள்ளப்பட்ட […]

கடந்த 4 ஆண்டுகளாக தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்து வந்தார்.. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.. அப்போது அண்ணாமலை தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா கூறியிருந்தார்.. ஆனால் தற்போது வரை அண்ணாமலைக்கு வேறு எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை.. இதனால் அண்ணாமலை பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக […]

கரூர் கோடங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவின் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.. அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.. இந்த விழாவில் பேருரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ இந்தியாவில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருந்தாலும் திமுக தொண்டர்களை போல் கொள்கை உணர்வு கொண்ட தொண்டர்கள் வேறு எந்த கட்சியிலும் இல்லை.. தமிழ்நாட்டின் நலனுக்காக உண்மையாக […]

சமீபத்தில், மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்களில் விரிவான மாற்றங்களை அறிவித்துள்ளது, இது செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும். இந்த சீர்திருத்தத்தின் கீழ், ஜிஎஸ்டி அடுக்குகள் நான்கு 5%, 12%, 18%, 28% இலிருந்து இரண்டு 5% மற்றும் 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளன, அத்துடன் சில பொருட்களுக்கு 0% மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு 40% என்ற புதிய அடுக்கு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பொது மக்கள், விவசாயிகள், […]

தமிழகத்தில் புதிய நோய் தொற்று ஏதுமில்லை என்பதால் மாஸ்க் அணிய வேண்டும் போன்ற பதற்றம் தேவையில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை, கோவை, தென் மாவட்டங்கள் என பல இடங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் மாலை அல்லது இரவில் மழையும் பெய்து […]

தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் மாஸ்க் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை, கோவை, தென் மாவட்டங்கள் என பல இடங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் மாலை அல்லது இரவில் மழையும் பெய்து வருகிறது. இந்த திடீர் காலநிலை மாற்றம் சளி, […]