ரகசிய கணக்கெடுப்பு பணியை தொடங்கியது டாஸ்மாக் நிர்வாகம்..!! விரைவில் தரமான சம்பவம்..!!

Tasmac 2026

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை கண்டறிந்து அவற்றை மூடுவதற்கும் அல்லது வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கும் வசதியாக, டாஸ்மாக் நிறுவனம் விரிவான கணக்கெடுப்புப் பணியை தொடங்கியுள்ளது.


கடந்த 2003-ஆம் ஆண்டின் மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவிற்குள்ளும், பிற பகுதிகளில் 100 மீட்டர் தொலைவிற்குள்ளும் மதுக்கடைகள் அமைக்கப்படக் கூடாது. இருப்பினும், பல இடங்களில் இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படாமல் கடைகள் இயங்கி வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

இதன் காரணமாக, குடியிருப்புப் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் முக்கியச் சந்திப்புகளில் அமைந்துள்ள கடைகளை அகற்ற வேண்டும் என அரசுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்து வந்தன. இந்நிலையில், கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வந்த 717 மதுக்கடைகளை மூடுமாறு அரசு உத்தரவிட்டு, அதன்படியே கடந்த ஜூன் மாதத்தில் அவை மூடப்பட்டன. இருப்பினும், இன்னும் சில இடங்களில் வீடுகளுக்கும், பள்ளிகளுக்கும் அருகில் கடைகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள கடைகளைக் கணக்கெடுக்கும் பணியில் டாஸ்மாக் அதிகாரிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பு நிறைவடைந்ததும், சேகரிக்கப்பட்ட விவரங்கள் அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் குறிப்பிட்ட கடைகளை மூடுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படவுள்ளன.

Read More : “அவமானத்தை நான் தாங்கிக் கொள்கிறேன்”..!! உதயநிதிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்..!!

Next Post

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்..!! சரக்கு விலை ரூ.20 வரை உயரப்போகுது..!! தவெக அரசு அதிரடி..!!

Sat Aug 8 , 2026
தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்தும் நோக்கில், பாட்டில் ஒன்றுக்கு 20 ரூபாய் வரை புதிய வரியை விதிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. காலியாகும் மது பாட்டில்களை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையிலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டும் ‘சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத்தீர்வை’ என்ற பெயரில் இந்த புதிய வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்காக, 2006-ஆம் ஆண்டின் மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்வதற்கான […]
Tasmac 2026

You May Like