அரியலூர் மாவட்டம், தேளூர் கிராமத்தில் வசிப்பவர் கோவிந்தசாமி (வயது 88). அவர் அந்த கிராமத்தின் நேட்டலாக இருந்தார். ஆர்.எஸ்.பதியை தன் வயலில் போட்டுள்ளார். வழக்கம் போல் இன்று காலை தனது தோப்புக்கு வந்தவர் இரவு தனது வயலில் உள்ள கொட்டாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது தலையில் பலத்த ரத்த காயங்கள் இருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முதியவர் கோவிந்தசாமியின் கையில் இரண்டு சவரன் மோதிரங்கள் இல்லை என்றும், அவர் எப்போதும் 5000 ரூபாய் வரை பணம் வைத்திருப்பதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
நகை, பணம் காணாமல் போனதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் இருவர் பைக்கில் நடுவே முதியவரை ஏற்றி வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் முதியவரை அழைத்துச் செல்லும் போது கொன்றார்களா அல்லது இறக்கும் போது அடித்து கொன்றாரார்களா என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.