2️ சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை…..! கரூர் அருகே பரபரப்பு…..!

கரூர் அருகே சகோதரிகளான 2 சிறுமைகளை பாலியல் வன்கொடுமை செய்தார். அவர்களுக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் 20 வருட காலங்கள் சிறை தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய்க்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.


கரூர் மாவட்டம் அரங்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன்( 43). கூலி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை.. இவர் கடந்த 2020 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி அதே பகுதியில் சேர்ந்த சகோதரிகளான 6 வயது மற்றும் 4 வயது சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு இருக்கிறார்.

இது தொடர்பாக சிறுமிகளின் தாயார் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரினை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் அத்துமீறி வீட்டுக்கு நுழைதல், போக்சோ போன்ற பிரிவுகள் கீழ் பதிவு செய்து சீனிவாசனை கைது செய்து இருக்கிறார்கள்.

கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி ஏ நசீமாபானு நேற்று இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்து தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் தல 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும்.

அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதோடு, இந்த தண்டனை காலத்தை ஏக காலத்திற்கும் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.அதோடு, இந்த வழக்கில் 2️ சிறுமிகளுக்கும் இழப்பீடாக தலா 2 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

Next Post

6️ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை…..!

Sun Mar 5 , 2023
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி கீரனூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மணி( 77). இவர் 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 6 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக, சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் குன்னம் காவல்துறையில் வழங்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து […]
pocso

You May Like