அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட சொத்து தகராறு…..! நாட்டுத் துப்பாக்கியால் அண்ணனை சுட்டு கொலை செய்த தம்பி அதிரடி கைது…..!

திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள கொத்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் சந்திரன் உள்ளிட்ட இருவரும் அண்ணன், தம்பிகள் இவர்களுக்குள் அவ்வப்போது வீட்டுமனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் இருவருக்கும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறி உள்ளது.


இதில் ஆத்திரம் கொண்ட தம்பி சந்திரன் தான் வைத்திருந்த வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து அண்ணன் வெங்கடேசனை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதில் அண்ணன் வெங்கடேசன் உயிரிழந்தார்.

ஆகவே தப்பி செல்ல முயற்சி செய்த சந்திரனை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். ஆகவே சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை எடுத்துக் கொடுக்குமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.

ஆனால் சந்திரனோ இதற்கு ஒத்துழைப்பு வழங்காததால் அங்கு இருந்த வீடுகளில் காவல்துறையினர் தேட தொடங்கினர். அந்த பகுதியில் உள்ள ஒரு புதர் பகுதியில் தேடிப் பார்த்தனர். இதில் ஒரு சில வீடுகளில் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் கள்ள துப்பாக்கிகள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியுடன் மேலும் 2️ துப்பாக்கிகள் காவல்துறையினருக்கு கிடைத்தது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து சந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றன.

Next Post

“ பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம்..” ஈரான் அதிபர் திட்டவட்டம்..

Sun Apr 2 , 2023
ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் சட்டமாக உள்ளது என்று அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்தார். ஈரானில் ஹிஜாப் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட பெண் ஒருவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போலிஸாரின் காவலில் இறந்ததைத் தொடர்ந்து, நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றது.. இதை தொடர்ந்து பெண்கள் பலரும் ஹிஜாப் அணியாமல் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.. இதனால் பாதுகாப்புப் படையினர் கிளர்ச்சியை கடுமையாக ஒடுக்கினர். இந்நிலையில் ஈரானின் வடகிழக்கு […]
b955001503d058827382804214a5e79af5398d03dc8f0b2a0adeedc9e503a9e6

You May Like