கேரள மாநிலம் கோட்டயத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் புது மாப்பிள்ளை மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டத்தில் கருக்கசல் என்ற பகுதியைச் சார்ந்தவர் பினு. தனது அண்டை வீட்டைச் சார்ந்த செபஸ்டின் அவரது திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் அவரது வீட்டின் மீது கற்களை எரிந்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த செபாஸ்டியன் அவரது நண்பன் விஷ்ணுவுடன் சேர்ந்து வினோவை வெட்டி கொலை செய்துள்ளனர்.
விஷ்ணு விற்கும் பினுவிற்கும் இருந்த பகையை தனக்கு சாதகமாக்கி அவருடன் சேர்ந்து பினுவை கொலை செய்து இருக்கிறார் செபஸ்டியன். கொலைக்குப்பின் செபஸ்டியனும் விஷ்ணுவும் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் பினு விஷ்ணுவை அவரது மனைவிக்கு முன் தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். இதன் காரணமாக பினுவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையே பகை இருந்திருக்கிறது. இந்தப் பகையை செபஸ்டியன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு விஷ்ணுவை கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. செபாஸ்டினுக்கு கடந்த வாரம் தான் திருமணம் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.