வாஸ்து சாஸ்திர நம்பிக்கைகள் தொடர்பாக, துடைப்பம் மற்றும் குங்குமம் வாங்கும் நாட்கள் குறித்து பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன. இந்த நிலையில், இந்து மரபில் இவ்விரு பொருட்களுக்கும் வழங்கப்படும் ஆன்மிக முக்கியத்துவம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நம்பிக்கைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, துடைப்பம் லக்ஷ்மி தேவியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதனால், வீட்டில் துடைப்பம் வாங்குவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக சில குறிப்பிட்ட விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என நம்பப்படுகிறது. குறிப்பாக, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் துடைப்பம் வாங்கக் கூடாது என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அந்த நாட்களில் துடைப்பம் வாங்கினால், லட்சுமி தேவியின் அருள் குறையும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
அதேபோல், இந்து மதத்தில் குங்குமம் மிகவும் புனிதமான ஒன்றாகக் கருதப்படுகிறது. பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமம் நீண்ட ஆயுள், வளம் மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. குடும்ப வாழ்க்கையில் குங்குமம் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக, வெள்ளிக்கிழமை குங்குமம் வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாள் லட்சுமி தேவிக்கு உகந்த நாளாக இருப்பதால், அந்த நாளில் குங்குமம் வாங்கினால் குடும்பத்தில் செழிப்பு அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
மேலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு குங்குமப்பூ பாலில் கலந்து கொடுப்பது போன்ற பழக்கங்களும் பாரம்பரியமாக இருந்து வருகின்றன. இது உடல் நலத்திற்கும், குழந்தையின் நலத்திற்கும் உதவும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. வாஸ்து சாஸ்திரம், ஜோதிடத்தின் ஒரு பகுதியாக கருதப்படுவதால், குடும்பத்தில் அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்த எந்த நாளில் எந்த பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இருப்பினும், இத்தகைய நம்பிக்கைகள் தனிப்பட்ட விருப்பம் மற்றும் மத நம்பிக்கைகளைப் பொறுத்தே அமையும்.



