சேலம் மாவட்ட பகுதியில் உள்ள திண்டமங்கலத்தில் சின்னப்பன் தனது மகள் கோமதியுடன் வசித்து வருகிறார். மகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகுசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் திருமணம் செய்து வைத்தார் . இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை.
இதன் காரணமாகவை தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையில் சுரேஷ் மனைவியிடம் பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வருமாறு தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் கோமதி மனமுடைந்த நிலையில் காணப்பட்டு சில நாட்களாக இருந்துள்ளார். இதனிடையே நேற்று கோமதி கணவர் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கியுள்ளார். இது பற்றி தகவல் அறிந்த கோமதியின் பெற்றோர்கள் அவரது இறப்பில் மர்மம் உள்ளது என கூறி , கணவர் வீட்டினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கோமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன் கணவர் வீட்டினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.