#அரியலூர் : வேலைக்கு சென்று திரும்பிய பெண்ணை அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை..!

அரியலூர் மாவட்ட பகுதியில் உள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராசாத்தி. இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச் சேர்ந்த முனியப்பன் என்பவருடன் திருமணம் நடந்தது.


ராமகிருஷ்ணன் ராசாத்திக்கு முதல் திருமணத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அன்று முதல் ராசாத்தி தனது சொந்த ஊரான வெங்கனூர் கிராமத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கோவில் எசனை கிராமம் செல்லும் சாலையில் வயலில் களையெடுத்து மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ராசாத்தி அரிவாளால் வெட்டப்பட்டார். தகவலறிந்து வெங்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ராசாத்தி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ராமகிருஷ்ணன் இறந்ததையடுத்து, அதே ஊரை சேர்ந்த நாகராஜன் என்பவரிடம், மகனிடம் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர ராசாத்தி ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. 

அதைத் திரும்பக் கேட்டபோது, ​​நான் உங்களிடம் பணம் எதுவும் வாங்கவில்லை என்று ராசாத்தி கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் நாகராஜை தேடி வருகின்றனர். 

மேலும், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

1newsnationuser5

Next Post

#கோவை: கழிவிடத்தை சுத்தம் செய்யும் ரோபோ.. புதிதாக உருவாக்கம் செய்த பேராசிரியர்..!

Thu Dec 29 , 2022
கோவை கணபதியைச் சேர்ந்த பேராசிரியர் சுரேஷ், பொதுக் கழிப்பறைகளில் சுகாதாரப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் பிரத்யேக ரோபோவை வடிவமைத்துள்ளார். மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் நிதியுதவியுடன் 2018 முதல் 2021 வரை ரோபோ வடிவமைப்பு ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  தற்போது பணிகள் முழுமையாக முடிவடைந்து, மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் ஒப்புதலுக்காக கருத்தருவானது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவில், மானிட்டர், எலக்ட்ரிக் பிரஷ், ஐ.ஓ.டி., சென்சார், பொருட்களை சுத்தம் […]
n4566733821672292094216d48115076b4cde072cb486f1520200d55423ce48d32ae93d0f840891787b2f55

You May Like