மூடப்படாத தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 குழந்தைகள் பலி.. நாகையில் சோகம்..!

nagai child death

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பத்து கிராமத்தில் தாத்தா வீட்டிற்கு விடுமுறைக்காக வந்திருந்த 4 வயது சிறுவர்கள் இருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தகவலின்படி, வீட்டின் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு இருந்த மூடப்படாத தரைமட்ட தண்ணீர் தொட்டியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் தவறி விழுந்துள்ளனர். சிறுவர்கள் நீண்ட நேரமாக காணாமல் போனதால் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.

பின்னர் கட்டுமானப் பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது, இரு சிறுவர்களும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர், சிறுவர்களின் உடல்களை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

குழந்தைகளின் சடலத்தை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாத்தா வீட்டிற்கு கோடை விடுமுறைக்காக சென்ற குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more: உங்கள் 30-களில் இவற்றை நீங்கள் உட்கொள்கிறீர்களா..? அப்படி எனில், 50 வயதை எட்டும்போது உங்கள் இதயத்தின் நிலை இப்படித்தான் இருக்கும்..!

English Summary

2 children die after falling into an uncovered water tank.. Tragedy in Nagapattinam..!

Next Post

தவெக ஆட்சியிலும் மாணவர்களுக்கு வழக்கம் போல் ரூ.1000 வரவு வைப்பு..! மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா..?

Thu May 14 , 2026
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது.. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. எனினும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.. இதை தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் […]
money college 2025

You May Like