ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இபிஎஃப்ஓ வழங்குகிறது.. இபிஎஃப்ஓ அமைப்பில் சுமார் 7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்..
இந்நிலையில் இ.பி.எஃப்.ஓ அமைப்பு 2022-23-ம் ஆண்டிற்கான பிஎஃப் நிதி வட்டி விகிதத்தை 8.10ல் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்தி உள்ளது… இ.பி.எஃப்.ஓ அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான, மத்திய அறங்காவலர் குழு, 2022-23 ஆம் ஆண்டிற்கான பிஎஃப் வைப்பு தொகைக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்துள்ளது.. டெல்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது..
நிதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு பிஎஃப் பணத்திற்கான வட்டி விகிதத்தை அதிகரிக்க இ.பி.எஃப்.ஓ அங்கீகரித்துள்ளது. இபிஎஃப்ஓ அமைப்பு, பிஎஃப் வைப்புதொகைக்கு, அதிக வட்டி விகிதத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய விகிதம் ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு, 2019-20 ஆம் ஆண்டிற்கான பிஎஃப் வைப்பு தொகைக்காக்கான வட்டி விகிதத்தை 8.65 சதவீதத்தில் இருந்து 8.5 சதவீதமாகக் குறைத்தது.. 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான வட்டியாகும்.. பின்னர் 2021-22 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.5%ல் இருந்து 8.1%ஆக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.