கர்நாடக மாநிலத்தில் கோழிக்கறியை சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் தந்தை மகனை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக அந்த சிறுவனின் தந்தை சுப்பிரமணியம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் கல்வியா தாலுகாவை சார்ந்த சுப்ரமணியம் என்பவருக்கு சிவராமன் என்ற மகன் இருந்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று அவர்களது வீட்டில் கோழிக்கறி சமைக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணி வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே சிவராமன் சமைத்த கோழிக்கறியை தந்தைக்கு வைக்காமல் முழுவதுமாக சாப்பிட்டு உள்ளார்.
வீட்டிற்கு பசியோடு வந்து பார்த்த தந்தை சுப்பிரமணி கோழிக்கறி இல்லாததால் ஆத்திரமடைந்து அருகிலிருந்த கட்டையை எடுத்து சிவராமை பலமாக தாக்கியிருக்கிறார் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிவராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய தகவலறிந்து சுப்பிரமணி வீட்டிற்கு வந்த காவல்துறையினர் இறந்த சிவராமின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளியான தந்தை சுப்பிரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோழிக்கறிக்காக தந்தையே மகனை படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.