காலியாக இருந்த கோழி குழம்பு சட்டி! ஆத்திரத்தில் கட்டையால் அடித்து மகன் படுகொலை! தந்தை கைது!

கர்நாடக மாநிலத்தில் கோழிக்கறியை சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறில் தந்தை மகனை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக அந்த சிறுவனின் தந்தை சுப்பிரமணியம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் கல்வியா தாலுகாவை சார்ந்த சுப்ரமணியம் என்பவருக்கு சிவராமன் என்ற மகன் இருந்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று அவர்களது வீட்டில் கோழிக்கறி சமைக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணி வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே சிவராமன் சமைத்த கோழிக்கறியை தந்தைக்கு வைக்காமல் முழுவதுமாக சாப்பிட்டு உள்ளார்.


வீட்டிற்கு பசியோடு வந்து பார்த்த தந்தை சுப்பிரமணி கோழிக்கறி இல்லாததால் ஆத்திரமடைந்து அருகிலிருந்த கட்டையை எடுத்து சிவராமை பலமாக தாக்கியிருக்கிறார் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிவராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய தகவலறிந்து சுப்பிரமணி வீட்டிற்கு வந்த காவல்துறையினர் இறந்த சிவராமின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளியான தந்தை சுப்பிரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோழிக்கறிக்காக தந்தையே மகனை படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

கனடாவிற்கு சென்ற காதலியை வரவழைத்து கொலை செய்த காதலன்! விசாரணையில் வெளியான பகிர் தகவல் !

Thu Apr 6 , 2023
ஹரியானா மாநிலம் சோனி பட்டில் கனடா சென்ற காதலியை திருமணம் செய்வதாக கூறி இந்தியாவிற்கு வரவழைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக அந்த பெண்மணியின் காதலர் சுனில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சரியான மாநிலம் தோணிப்பட்டை சார்ந்தவர் சுனில் வயது 26 . இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுனில் என்பவர் மோனிகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். மோனிகாவிற்கு […]
20230406 193630

You May Like