fbpx

அண்ணாமலை பகீர்…! டி.ஆர் பாலு தொடுத்த வழக்கு…! இன்று நேரடியாக நீதிமன்றத்தில் ஆதாரம் கொடுப்பேன்…!

திமுக எம். பி டி.ஆர் பாலு தொடுத்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் ஆஜராக உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு பாஜக – திமுக இடையே கருத்தியல் ரீதியானம் அதுபோல் தமிழக மக்களின் நன்கு அறிந்ததே. அரசின் பல துறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து வந்தார். இந்த நிலையில் தான் ஏப்ரல் 14ஆம் தேதி திமுகவில் சொத்து பட்டியல்களை வெளியிடப் போவதாக அறிவித்தார். அறிவித்ததை போலவே சொத்து பட்டியல்லை வெளியிட்டதுடன், முதலமைச்சர் ஸ்டாலின் மீது 200 கோடி ரூபாயில் ஊழல் குற்றச்சாட்டை முன் வைத்தார்.

அந்த பட்டியலில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், கனிமொழி,டி ஆர்.பாலு, கலாநிதி வீராசாமி அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, துரைமுருகன், பொன்முடி, அமைச்சர் அன்பில் மகேஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், கலாநிதி மாறன், ஆகியோரின் சொத்து பட்டியல் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் தொடர்பான விவரங்கள் அடங்கிய வீடியோவை அண்ணாமலை வெளியிட்டார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன் மீது அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட காரணத்தினால் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த நிலையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு தாக்கல் செய்த அவதூறு வழக்கில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

ஊழல் எனும் கரையான், இத்தனை ஆண்டு காலம் நமது நாட்டை எப்படி அரித்திருக்கிறது என்றும், அதனை அரசியலிலிருந்து முழுமையாக அப்புறப்படுத்த வேண்டியது எத்தனை முக்கியம் என்பதையும் பொதுமக்கள் அனைவரும் அறிவார்கள். நமது மாண்புமிகு நீதித் துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவினர் சொத்துக் குவிப்பு பற்றிய அனைத்து உண்மைகளும் மாண்புமிகு நீதிமன்றம் வாயிலாக மக்களுக்குத் வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த திமுகவுக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை!... தந்தை, மகன் விக்கெட்டுகளை எடுத்து அசத்தல்!

Fri Jul 14 , 2023
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திர அஸ்வின் சாதனை படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ் போட்டி டொமினிகாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். […]
இன்றைய போட்டி ரொம்ப முக்கியம்..!! புதிய சாதனைகள், முக்கிய பட்டியலில் இடம்பெறும் அஸ்வின்..!!

You May Like