துணைவேந்தர் நியமனத்திற்கு இடைக்கால தடை…! உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு…!

supreme court 2025

தமிழக பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, கவர்னரிடம் இருந்து, மாநில அரசுக்கு மாற்றம் செய்து, சட்டத்தில் திருத்தம் செய்து, 10 சட்ட மசோதாக்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசாங்கம் மேல்முறையீடு செய்துள்ளது.


தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு. இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு இடைக் கால தடை விதித்து கடந்த மே 22-ம் தேதி உத்தரவிட்டனர். இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மூத்த வழக்கறிஞர் மற்றும் திமுக எம்பியுமான வில்சன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Read More: 3-வது முறையாக மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..? ஜாக்பாட் அறிவிப்பை வெளியிடும் ஆர்பிஐ..!!

Vignesh

Next Post

தமிழ்நாடு முழுவதும் மாபெரும் சிறப்பு முகாம்..!! ரூ.1,000 உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!!

Wed Jun 4 , 2025
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும், விடுப்பட்டவர்களை இணைக்கும் நோக்கில் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 1.14 கோடி பேர் பயனடைந்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உள்ளது. தமிழ்நாடு அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் […]
1000 2025 2

You May Like